மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, December 29, 2010

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 6

தேங்காய் என்பது முக்கண் முதல்வன் எனக் கருதப்படும் சிவனாகவே கருதப்படுகிறது.எல்லா பூஜைகளிலும் இது முதன்மைப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த தேங்காயை தெங்கம்பழம் எனவே பழந்தமிழர் அழைக்கிறார்கள்.''இதையே பழமொழி நானூறில் நாய் பெற்ற தெங்கம் பழம்'' என்ற பழமொழியோடு அழைக்கிறார்கள்.

இந்தத் தேங்காய் வளர்ந்து பலன் கொடுக்க ஐந்தாண்டுகள் ஆகிறது.அது போல குழந்தையும் பள்ளிக்கு அனுப்ப ஐந்தாண்டுகள் ஆகிறது.தென்னையையும் பிள்ளை என்று அழைக்கிறார்கள்.பிள்ளையும் தென்னையும் ஒன்று என்பதற்காகவே தென்னம் பிள்ளை என்றழைக்கிறார்கள்!

தேங்காயையும்,வாழைப் பழமும்தான் நாம் கடவுளுக்கு பிரசாதமாய்ப் படைக்கிறார்கள்.இந்தத் தேங்காயும் மிகவும் உயர்வான இடத்தில் காய்க்கிறது.தரைக்குக் கீழ் விளையும் உணவுப் பொருட்கள் அகந்த மூலம் எனப்படும். தரைக்கு மேல் விளையும் உணவுப் பொருட்கள் கந்த மூலம் எனப்படும்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் பன்றிக்கானது.பன்றியே அகங்கார வடிவே.அதையே லிங்கோற்பவர் வடிவத்தில் உள்ள சிவனின் ஒளியுருவத்தின் கீழ் அடியைத் தொட்டதினால் சிவனே அவரது அகங்காரம் நீக்கி பன்றியுருவான  விஷ்ணுவைத் தூக்கி எடுக்கிறார்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் அகங்காரத்தை உண்டாக்கும் என்பதால் அகந்த மூலம் என்றும்,தரைக்கு மேல் விளையும் பொருட்களில் உயரமான தென்னையில் விளையும் தேங்காய்,மற்றும் வாழையின் பழம் இரண்டும் கந்த மூலத்தில் சிறந்தது.

திரு மூ.ஆ.அப்பன் அவரது 30 தாவது வயதில் கர்ம வியாதியான குஷ்டத்தில் அவதிப்பட்டு தன் அண்ணனான திரு மு.ராமகிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்க அவர் இயற்கை உணவினை உண்டால் குணம் பெறலாம் என்று கூறினார்.முன்பெல்லாம் பெரு வியாதியஸ்தர் உள்ளே வரக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பொது இடங்களிலும் எழுதி வைத்திருப்பார்கள்(பெரு வியாதி என்பது குஷ்டம்,ஷயரோகம்,புற்று நோய்,பெண்வியாதி(V.D.R.L)).அவ்வளவு கொடுமையானது இவ்வியாதி.

திரு மு.ஆ.அப்பன் அவர்கள் எல்லா இயற்கை உணவையும் பரீட்சித்து பார்த்துவிட்டார்.ஆனாலும் வியாதியின் வேகம் குறைந்தது,ஆனால் அதிகம் குறையவில்லை.கைகளில் நகம் காணாமல் போய்விட்டது.விரலும் காணாமல் போக ஆரம்பித்தது.பின் அவர் சிந்தித்தார்.இறைவனுக்கு படைப்பது எது தேங்காயும்,வாழைப் பழமும்,அதையே நாமும் உண்டாலென்று எண்ணி அதையே உண்ண ஆரம்பித்தார்.தற்போது அவர் குணமானது போல் பல பெரு வியாதியஸ்தர்களை பலரை குணமாக்கி வருகிறார்.பல குஷ்ட ரோகிகளையும்,எய்ட்ஸ் நோயாளிகளையும்,ஷயரோகம்(T.B),புற்று நோய்(CANCER),பெண்ணால் வரும் வியாதியான மேகக் கிரந்தி(V.D.R.L),செம்மேகக் கிரந்தி(A.I.D.S) நோயாளர்களையும் சாப்பிடும் உணவாலேயே குணப்படுத்தி வருகிறார்.

திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.இவ்வரிய நோய் நீக்கும் உணவுக் கலையையும், நோய் வருமுன் காக்கும் நோயணுகா விதியைத் தெரிந்து கற்க ஓர் அரிய வாய்ப்பு இதோ கீழே காத்திருக்கிறது.வரும் ஜனவரி மாதம் 21-01-2011,22-01-2011,23-01-2011 ஆகிய தேதிகளில் இயற்கை நல வாழ்வு முகாம் குலசேகரபட்டணத்தில் நடக்க இருக்கிறது.பங்கு பெறுங்கள் பயனடையுங்கள்.    
மேலும் ஒரு முக்கிய விடயம்.காயகல்பத்திற்கு ஒரு போதுண்பதினால் மீதி இரு வேளைகளிலும் தேங்காயும் பழமும் உண்டால் அதன் மகிமைதான் என்ன.

இதோ எனது நீரோட்ட குருநாதரான திரு பால் வாசனின் பிரதம சீடரான திரு ஆசீர் ஜோசப் அவர்கள் நீரோட்டம் பற்றிய சில விடயங்களை உணர்த்தினார்.அதில் ஒன்று தேங்காயை வைத்து நீரோட்டம் பார்ப்பது.கையில் தேங்காயை வைத்துக் கொண்டு நீரோட்டம் ஓடும் இடத்தில் கால் வைக்க
தேங்காய் எழுந்து நிற்கிறது.கீழுள்ள படங்களைப் பாருங்கள்.
கையில் படுத்திருக்கும் தேங்காய்
 நீரோட்டமுள்ள இடத்தை கால் பெரு விரலால் தொட்டவுடன் எழுந்து நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள்.

மேலும் நீரோட்டமுள்ள இடத்தில் தேங்காயை படுக்கை வசமாக வைத்து அதன் மேல் தரையில் கால் படாமல் ஏறி உட்கார தேங்காய் நம்மையும் சேர்த்து சுற்றுகிறது.தேங்காயின் மகத்துவம்தான் என்னென்று சொல்வது.அவ்வளவு உயிரோட்டம் உள்ள தேங்காயை உண்டால் நம் உயிரின் ஓட்டம் எவ்வளவு முன்னேறும் யோசியுங்கள்.

கற்றிடுவோம் சாகாத கல்வி!!!  


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Tuesday, December 28, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(18)


காயகற்பம் உண்ணுதலும் முறைமைகளும்
காயகல்பம் எனபது பொய்யான காயத்தை மெய்யாக்குவது.அதாவது சித்தர்கள் உபயோகித்த மரணம் மாற்றும் மூலிகைகளை உபயோகித்து மரணமும் ஒரு வியாதி என்றும், அதையும் குணமாக்கலாம்(அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்) என்பதை விவரிப்பதே காயகல்பப் பிரயோகம்.

காயத்தை மெய்யாக்கு!காயத்தை மெய்யாக்கு! என்பது சித்தர்கள் முழக்கம்.காயத்தை எப்படி மெய்யாக்குவது.ஓடும் மூச்சை ஓடவிடாமல் நிறுத்த பிரணாயாமம்,யோகா,தியானம்,போன்றவற்றால் கழிந்து போகும் பிராணனை,கழியாமல் நிறுத்துவது.
இதில் கழிந்து போன பிராணனை உபாயமிட்டு அழைக்க ஒரு வழி சொல்கிறார் சிவவாக்கியர்.அதை இங்கே விவரிக்கப் போவதில்லை.

இனிப் போக இருக்கும் பிராணனை போகாமல் காக்கவே காயகல்பம் உதவும்.12 வயதிற்குள் ஒரு மாமாங்கம் கற்பம் உண்டால் உடல் வஜ்ர தேகமாகும்.24 வயதிற்குள் கற்பம் உண்டால் கற்பம் பலிதமாகும்.48 வயதிற்குள் கற்பம் உண்டால் 12 வருட தியானத்திற்காகும்.60 வயதிற்குள் கற்பம் உண்டால் மறுபிறவிக்கு இந்த ஞானம் தொடரும்.
முதிய வயதில் அதாவது 90 வயதிற்கு மேல் 
காயகல்பம் உண்டால் பயனில்லை.


எனவே இளமையில் காயகல்ப மூலிகைகளை எப்படி உண்ண வேண்டும் என்பதை கற்று உண்டால் முதுமையில் மண்ணோடு மண்ணாகிப் போக வேண்டியது இல்லை.''அங்கமடா உன்னுடம்பு தங்கமாகும்,பூமியிலே புதைத்திட்டாக்கால் மண் தின்னாது''.


காயகல்பம் உண்ண கீழ்க்கண்ட முறைகளை கடைப் பிடிக்கவும்.


உன்னியே பாலோடு நெய்யைக் கூட்டு
ஒரு சேர சமைத்துண்டு ஒரு போதையா!
பண்ணியே ராமானு பாலைக் கொள்ளு,
பணியாரம்,சிறுபயறு,பழமும்,தேனாம்,
குன்னியே கோரக்கர் கற்பமாகும்.
போமென்றே புளிமேல் ஆசையானால்,
புளியாரை,புளியரணை,சீக்காய்க் கொழுந்து,
நேமென்ற நெல்லிக்காய் பசலைக் கீரை நித்தியமாய்க் கூட்டியே கற்பமுண்ணு,
ஆமென்ற பயரோடு யிளநீருங் கரும்பும்,
ஆகாது குளிர்ந்த தண்ணீர் தானுங்காணே!

அதாவது பால்,நெய்,தேன்,பணியாரம், சிறு பயறு,பழம்,தேன்,ஆவின்(பசுவின்) பால்,இவற்றைச் சேர்க்கலாம்.சமைத்த உணவை ஒரு போது மட்டும் உண்ண வேண்டும்.புளி,போகம்(பெண் சம்போகம்),லாகிரி(போதை தரும் வஸ்துக்கள்) நீக்கி மனதை இறையிடம் நாட்டி தியானம் புரிய வேண்டும்.

வெயிலில் அலைதல் கூடாது.குளிர்ந்த தண்ணீர் குடிக்கவும் குளிக்கவும் உபயோகிக்க கூடாது.இளஞ் சூடான வெந்நீர்தான் உபயோகிக்க வேண்டும்.

புளி மேல் ஆசைப் பட்டால் நல்ல புளிப்புச் சுவையான புளியாரை,புளியரணை,சீயக்காய்க் கொழுந்து,நெல்லிக்காய்,பசலைக் கீரை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

பயறு வகைகள்,இளநீர்,கரும்பு,குளிர்ந்த தண்ணீர் கற்பமுண்ண ஆகாது.கடும் உடலுழைப்புக் கூடவே கூடாது.

இந்த வகையாய் 48 நாட்களுக்கு ஒரு கற்பம் வீதம் காயகற்பம் உண்டு 12 வருடங்கள்(ஒரு மாமாங்கம்) பல வகையான கற்பங்களை உண்டு வந்தால்,உயிர் அழியாது உடலில் நிலைத்து நிற்கும்.மூச்சு அளவில்லாமல் ஓடாமல் குறையும்.         

திறந்திட்ட விஷ்ணுகரந்தை தனைக் கொணர்ந்து செப்பமாய் மண்டலந்தான் பாக்களவு பாலிரைத்துண்ணு
மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும் மாசற்ற யெலும்புக்குள் சுரந்தான் போகும்
கரைந்திட்ட தேகமது கருத்துமின்னும் கண்ணொளிதான் யோசனை தூரங்காணும்,
றந்திட்ட சுவாசமெல்லா மிருகியேறும்
ஏற்றமாஞ் சுழிமுனையுந் திறந்துபோமே!!!
விஷ்ணு கிராந்தியை வேரோடு(சாப நிவர்த்தி மந்திரங்களைச் சொல்லி) பறித்துக் கொண்டு வந்து,அனு தினமும் பாக்களவு ஆவின் பாலிலோ(பசுவின்),அல்லது ஆட்டுப் பாலிலோ அரைத்துண்ண, மறந்த அனைத்து நினைவுகளும்(மறந்த பழைய நினைவுகளில் சென்ற பிறவி நினைவுகளும் அடங்கும்) மீண்டும் நினைவுக்கு வரும், அஸ்தி சுரம் என்ற எலும்பைப் பற்றிய சுரம் போகும்,கரைந்து போன தேகம் கருத்து இரும்பு போல மின்னும்,கண்ணொளி ஒரு யோசனை தூரம் (ஒரு யோசனை என்பது 100 காத தூரம்,ஒரு காதம் என்பது 4 கூப்பிடு தூரம், ஒரு கூப்பிடு தூரம் என்பது நாம் அதிக பட்சக் குரலால் கத்தினால் கேட்கும் தூரம்)தெரியும்.(கண் தெரிய எந்த மூலிகைகள் எல்லாம் உதவுகிறதோ அந்த மூலிகைகள் எல்லாம் மரணம் மாற்றும் மூலிகைகளாகவும் இருக்கும் எ.கா;- பொன்னாங்கண்ணி,கரிசலாங்கண்ணி).இறந்திட்ட சுவாசம் என்பது அழிந்து,கழிந்து போன சுவாசம்,அது இறுகி ஏற்றங் காணும்.சுவாசம் ஏற்றங் காணக்காண சுழிமுனையான ஏழை வாசல் திறக்கும்.(இது அறுத்தடைத்த வாசல்) இதை திறக்க சாவி இதுவும் ஒன்று!பிறகென்ன மரணமில்லாப் பெருவாழ்வுதான்!


இதில் காயகல்பத்துக்கு உபயோகிக்கும் மூலிகைகளை பச்சையாக உயிரோடு(சாப நிவர்த்தி மந்திரங்களைச் சொல்லி பறிக்கும் போதுதான் மூலிகையின் உயிர் அதன் உடலில் தங்கி இருந்து நம் உயிரை வளப்படுத்த வரும்) பறித்த உடன்,உபயோகிக்க வேண்டுமேயல்லாது,கடைகளில் விற்கும் சூரணங்களை வாங்கி உபயோகிக்க கூடாது.     


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த

பதிவில் சந்திக்கிறேன்.




மிக்க நன்றி


என்றென்றும் பேரன்பினால்


சாமீ அழகப்பன்

Post Comment

Friday, December 24, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(17)

இந்தப் பதிவில் மிக மிக முக்கியமான மூலிகையான விஷ்ணு கிராந்தி,விஷ்ணு கரந்தை என்றும், விஷ்ணுவின் பெயரால் அழைக்கப்படுகிறது.விடாத காய்ச்சலுக்கு விஷ்ணுக் கிராந்தி என்பார்கள்.மரணம் வரும் வேளையில் சிலருக்கு யமலோகக் காய்ச்சல் என்று ஒன்று வரும் எந்த மருந்தாலும் தணிக்க முடியாத இந்தக்காய்ச்சல்,விஷ்ணுக் கிராந்திக்கு தணியும்.
விஷ்ணு கரந்தை
என்ற விஷ்ணுக் கிராந்தி 
இதில் இந்தக்கரந்தையை மூன்றாகக் குறிப்பிடுவர், விஷ்ணு கரந்தை,சிவ கரந்தை,கொட்டைக் கரந்தை.இதில் விஷ்ணு கரந்தை நீலப் பூ பூக்கும்,சிவ கரந்தை வெள்ளை நிறப்பூ பூக்கும்,கொட்டைக் கரந்தை யானை நெருஞ்சியின் காயளவுக்கு கூட்டுக் காயாய் இருக்கும்.இவை மூன்றுமே மிக அரிய காய கல்ப மூலிகைகள்.மூன்றுமே அஷ்ட கர்ம மூலிகைகள்.இவை மூன்றுமே பூக்கும் முன் எடுக்க வேண்டும் அப்போதுதான் காயகல்பத்துக்கு ஆகும்.மருந்திற்கு எந்த நிலையிலும் எடுக்கலாம்.

அஷ்ட கர்ம மூலிகைகள் என்பவை,அஷ்ட கர்மமான எட்டு வகையான மந்திரப் பிரயோகத்திற்கு அவசியமான மூலிகைகள்.அஷ்ட கர்மம் விபரம் காண காண்க.

மிக அருமையாக நாம் செய்த கர்மத்தையும், அதனால் விளையும் கர்ம வியாதியைகளையும் தீர்க்கும்.(சாதாரண மருந்துகளால் தீர்க்க முடியாத நோய்களை கர்ம நோய்கள் என்பார்கள்.எ-கா குஷ்டம்
LEPROSY ),பால்வினை நோய்கள்(V.D),ஷய ரோகம(T.B))

செய்ய மாலின் கிராந்தி தீராத வல்ல சுரத்
தைய மறுக்கும் மனற் தணிக்கும்-பையவரு
காச மிருமலையுங் கட்டறுக்கும் வாதத்தா
லூசலா டும்பிணிபோக் கும்.
-பதார்த்த குண சிந்தாமணி-
இதன் சமூலத்தை(சமூலம் என்றால் வேர் காய்,பூ,இலை,தண்டு முதலான பஞ்ச(ஐந்து) அங்கங்கள் இணைந்த மொத்தச் செடியும்) ஒன்று முதல் ஒன்றரைப் பலம்(ஒரு பலம் என்பது 35கிராம்) வரை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் பாண்டத்தில் போட்டு 1/2 படி தண்ணீர் விட்டு 1/4 படியாக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி,வேளைக்கு 2-3 அவுன்ஸ் வீதம் தினம் 3வேளை பெரியவர்களுக்கு  கொடுக்கலாம்.அல்லது ஒரு கொட்டைப் பாக்களவு(1/2 ரூபாயெடை) அரைத்து,பாலில் கலக்கி வடிகட்டிதினம் 3 வேளை கொடுக்கலாம்.இவற்றால் சீதபேதி,சுரம்,மேகம்,ஷயம்,காசம்,இருமல்,ஈளை,வாத பித்த ரோகங்கள் எல்லாம் தீரும்.இன்னும் கண்களுக்கு பிரகாசம் அதிகரிக்கும்.

கப ரோகங்களுக்கு கியாழமிடும்(மேற்கண்டவாறு கஷாயம் போடும்போது) சமயம் சிறிது சிற்றரத்தை, துளசி கூட்டிக் கொள்வது சாலச் சிறந்தது.சுரத்துடன் காணப்படுகின்ற சீதபேதி,அஜீரண பேதி முதலியவைகட்கு இத்துடன் சிறிது சீரகம்,லவங்கப்பட்டை கூட்டிக் கஷாயம் போட நல்லது.


விவசாயப் பெருமக்களுக்கு ஒரு வேண்டு கோள் இது போல வரப்போரம் வளர்ந்து கிடக்கும் மூலிகைகளின் தெரியாமல்தான் போய்விட்டோம்,அவற்றைக் கொல்லாமல் இருக்கலாமல்லவா!களைக் கொல்லி என்ற ஒரு விஷத்தை இது போன்ற செடிகளின் மேல் அடிக்கிறார்கள்.நம் உயிரை வளர்க்கும் இது போன்ற செடிகளை அழிக்கலாமா!


உங்கள் வலைப் பூவை எந்த விவசாயி பார்க்கப் போகிறார்கள் என்று நினைக்கும் வாசக அன்பர்களே நீங்கள்தான் இந்த விஷயத்தை அந்த அறிவுக் குறைவான விவசாயிகளிடம் சொல்ல வேண்டும்.தாய்ப்பால் முதல் அனைத்தும் விஷ மயமாகி வருகின்ற வேளையில்,மேலும் விஷங்கள் தேவையா!இறைவா இவர்கள் அறியாது செய்கின்றார் மன்னியும் நீர்.  

அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியாக மிக முக்கிய விஷயமான விஷ்ணு கிராந்தியை காயகல்பப் பிரயோகத்திற்கு பயன்படுத்துவது பற்றி... அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Wednesday, December 22, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(16)

யோகாவும்,பரதமும்,
(TAI-CHI)டாய்-சீ யும்


நமது பாரத நாட்டில் யோகம் என்பது சித்தர்களும்,  ஞானிகளும்ரிஷிகளும் பல விடயங்களைக் கண்டறிந்துள்ளனர்,அதில் முக்கியமானது யோகாவும்,  பரதமும்.

பல விலங்குகளின்அங்க அசைவுகளை அடிப்படையாக வைத்து பல உடல் அசைவுகளை கண்டுபிடித்துஅவற்றுக்கு ஆசனங்கள் என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.

இந்த அங்க அசைவுகளை மேற்கொள்வதன் மூலம்,உடலின் அத்தனை உள்ளுறுப்புக்களும்புத்துணர்வு அடைந்துநோய் வருமுன் உடலைக் காப்பதோடு,நோய் வந்தால்,அதை குணப்படுத்தவும் செய்கின்றன.இந்த யோக சாதன முறைகளை அட்டாங்க யோகம் என்று வகைப்படுத்தி குறிப்பிடுவர்.அதாவது எட்டு வகையான யோக சாதன படித்தரங்கள் உள்ளன.

அதில் முக்கியமானவை யமநியமஅனுஷ்டானம் என்பவை.யமம் என்றால் எவையெல்லாம் எமன் நம்மிடம் வரும் வழியோ அவைகளை செய்யாமல் இருப்பது.அதாவது செய்யக் கூடாதவைகளைச் செய்யாமல் இருப்பது.இதையே திருப்பாவையில் ஆண்டாள் தன் பாசுரத்தில் ''செய்யாதன செய்யோம்''
என்கிறார். 

நியமம் என்பது எவைகளெல்லாம் செய்யக்கூடியவைகளோ அவைகளை அனுதினமும் செய்வது.அனுஷ்டானம் என்பது செய்யக் கூடாதவைகளைச் செய்யாமல் இருப்பதும்செய்யக் கூடியவைகளைச் செய்வதுமான பழக்க,வழக்கங்களை பழக்கத்திற்கு கொண்டு வருவது.

இதன்மூலம் உடலை நோயை அணுகவிடாது காத்து வந்துள்ளனர்.உடலை சுத்தப்படுத்தும் முறைகளான பிரணாயாமம்பஸ்திகுடல் சுத்தம்உடல் சுத்தம் (குளியல்) , விரதங்கள்(குடலுக்கு வாரத்தில் ஒரு நாளோ இரு நாட்களோஉண்ணாமல் நோன்பிருப்பது),
இதையே வட மொழியில் ''லங்கணம் பரம ஔஷதம்'' என்பார்கள்,அதாவது பட்டினியே சிறந்த மருந்து என்பார்கள்.

எனவேதான் தந்தை இறந்தபின்அவர் மக்கள் அமாவாசை விரதம் அனுஷ்டிக்கின்றனர்.அதாவது இன்று வரை உன்னைக் காக்க உன் தகப்பன் இருந்தார். இன்று முதல் உன்னை இந்த விரதம்தான் காக்கும் என்று பொருளாகும்.

சந்திரன் உடல் காரகன்,சந்திரனின் சக்தி பரிபூரணமாக இல்லாத அமாவாசை திதியில் உடலின் சீரண சக்தி குன்றும். அப்போது நீங்கள் உண்ணா நோன்பிருந்தால்உடல் தன் சோர்விலிருந்து விடுபடும். எனவே இந்த விரதத்தை தகப்பன் இல்லாதவர்கள் மட்டுமல்லபக்கத்தில் பெற்றோர் இல்லாத சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும்இந்த அமாவாசை விரதம் இருக்கலாம்.இது பெற்றோர் உடனிருந்து நம்மை பார்த்துக் கொள்வதற்குச் சமம்.










அட்டாங்க யோகத்தைப் போலவே பரதமும் விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.வலது பக்க செயல்பாடும் இடது பக்க செயல்பாடும் ஒன்றாக்கப்படுவதே இதன் சிறப்பு.

அதாவது வலது பாகம் சிவ பாகம்இடது  பக்கம் சக்தி பாகம்.இவை ஒன்றாக இரு பக்கமும் இயக்கப்படும் போது மூளையில் உள்ள வெள்ளை நிறப் பொருளும்(WHITE MATTER),சாம்பல் நிறப் பொருளும்(GREY MATTER) நன்கு இயக்கம் பெறுகின்றன.இதன் விளைவாக உடல் ஆரோக்கியம் சீர்பெறுகிறது.அதாவது YIN-YANG சீராக்கப்படுகிறது.

பக்க வாதம் என்பது இந்த YIN-YANG IMBALANCE ஆல்தான் வருகிறது என்று அக்கு பங்சர் தத்துவம் சொல்கிறது. இன்னும் விளக்கமாக சொன்னால் பக்க வாதம் மட்டுமல்ல அனைத்து நோய்களுமே இந்த ஒத்தியைவு அற்றதால் மட்டுமே வருவது.இதை சரி செய்தால் உடலில் உள்ள எல்லாமே சரியாகும்.







YIN-YANG IMBALANCE ஐ சரி செய்ய சீனத் தத்துவம் TAI- CHI என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.நாம் மேலே சொன்ன அதே போன்ற மென்மையான அசைவுகளில்,பறவைகள் மற்றும் விலங்குகளின் அங்க அசைவுகளை வைத்து உருவாக்கப்பட்டதே
TAI - CHI.சீன ஆன்மீக தத்துவ மேதை டாவோ இதை உருவாக்கினார் என்றும்,பழங்காலத்திலிந்தே இது சீன மக்களால் கையாளப்பட்டு வருகின்றது என்றும் இரு வேறு கருத்துக்கள் கூறுகிறார்கள்.






எது எப்படி ஆனாலும் இது மிகவும் மேம்பட்டது.இது மெதுவான அங்க அசைவுகளைக் கொண்டது,வேகமான அங்க அசைவுகளை கொண்டதல்ல.மிருதுவான தொடுதல்களை உள்ளடக்கியது.அதன் மூலம் வலுவான தாக்குதல்களை உள்ளடக்கியது.



அதாவது ஒரு தாய் சீ ஆசான் தாக்கினால் வெளிக்காயம் ஏதும் இருக்காது.ஆனால் முக்கிய உள் உறுப்புக்கள் சிதைந்து போகும்.நமது வர்மத்தில் மெய் தீண்டாக்காலம் என்ற ஒன்று உண்டு. அதாவது உடலை தொடாமலே வர்மத் தாக்குதல் தொடுப்பது. அதை நோக்கு வர்மம் என்பார்கள். அதாவது பார்வையாலேயே வர்மத் தாக்குதல் தொடுப்பது. இந்த முறையில் பல நூறு பேர்கள் வந்தாலும் ஒரே நேரத்தில் தாக்கலாம்.

அது போலவே TAI - CHI யில் TOUCH LESS THROW என்ற ஒன்று உண்டு. அதாவது தொடாமலே தூக்கி எறிதல்.எதிரி நம்மைத் தாக்க வரும்போதே எதிரியின் சக்தி நம்மை நோக்கி வர ஆரம்பிக்கும் அதை அன்போடு வாங்கி அவருக்கே எதிராக அவர் சக்தியை பிரயோகித்து தூக்கி எறிதலே இதுவாகும்.

இது தாக்குவது என்றெல்லாம் போவதால் இது தற்காப்புக் கலைகலுள்ளும் வருகிறது.ஆனால் நான் இங்கு கூற விரும்புவதுஅக்கு பங்சர் தத்துவத்தின்படிஇது நம் உடலில் உள்ள 12 உள்ளுறுப்புக்களுக்கான சக்தியோட்டப் பாதைகளின் சக்தியை சீர் செய்கிறது. இதனால் நோய் இருந்தால் குணமாகிறது.வராமல் காக்கப்படுகிறது.இந்த டாய்-சீயைவூ-சூ(VU-SU) என்றும்,உடாங் கலை (VUDANG),என்றும் அழைக்கிறார்கள்.

இதனால் சீனாவில் இது பெருமையாக போற்றப்படுகிறது. இதன் பெருமையை உலகம் அறியவும்சீன மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் குழுமியிருந்து இந்த டாய்-சீ யை செய்தார்கள் இது 24,48,84,124 வகையான பறவைகள் மற்றும் மிருகங்களின் நகர்வுகளாகச் சொல்லித் தரப்படுகின்றது.இந்த வார புதிய தலைமுறைப் புத்தகத்தில் இதைப் பற்றி ஒரு கட்டுரை உள்ளது.பதிவு பெரிதாகப் போய்விட்டதால் அதை இங்கே வெளியிடவில்லை.இதைக் கொண்டு பஞ்ச பூத சக்திகளையும் கட்டுப்படுத்தலாம்.கீழே கொடுத்திருப்பதையும் பாருங்க.




அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment