மொழி பெயர்ப்புக் கருவி

Friday, September 3, 2010

சித்தர்களின் ரசமணி ரகசியங்கள்

எனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே!
இவர்களின் பரம்பரையில் வந்ததாலோ என்னவோ இந்த சித்த வைத்திய முறைகளை எனது மாமா சற்குரு அருட்திரு மிகு பார்த்த சாரதி ஐயா அவர்களின் திருக்கடாட்சத்தால் மூலிகைகள் ,மருந்துகள் பற்றிய விவரங்களும் அவைகளை முடிக்கும் விதம் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு.நான் எனது தாத்தாவின் ஒரு கையெழுத்துப் பிரதியைப் பார்த்து அதில் வர்மம் பற்றிய குறிப்புக்களைப் பற்றித் தெரிந்து கொண்டு,அதை கராத்தே குங்பூ போன்று அதை அடுத்தவர்களை உதைக்க பயன்படுத்தலாம் என்று எண்ணி,அதை முழுமையாக கற்றுக் கொடுங்கள் என்றுதான்,முதன்முதலில் எனது மாமா அருட்திரு மிகு பார்த்த சாரதி ஐயாவைக் கேட்டேன். ஆனால் அவரோ கைநாடி பார்க்க தெரியாமல் வர்மம் கற்றுக் கொண்டால் பயன் இல்லை என்று கூறி என்னை,வேறு பாதையில் திருப்பி கொஞ்சம் ,கொஞ்சமாக நாடி பார்க்க கற்க வைத்து,வைத்தியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்க வைத்தார்.

பின்னாளில் நான் வர்மம் பற்றி அறிந்து கொண்ட பின்( எனக்கு இரு குழந்தைகள் பிறந்த பின் நான் இனி யாரையும் கைநீட்டி அடிக்க மாட்டேன் என்று தெளிவாய்த் தெரிந்த பின்னரே கீழ்க்கண்ட விதிமுறைகளுடன் கூடிய சத்தியத்தையும் வாங்கிக் கொண்ட பின்னரே எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
1) உயிருக்கு ஆபத்தான சமயந் தவிர வேறு சமயங்களில் இந்த வர்மக் கலையை பிறருக்கு எதிராக பிரயோகிக்கக் கூடாது, என்றும்
2)கற்றுக்கொடுத்த குருநாதருக்கு எதிராக எந்தச் சூழ்நிலையிலும் இந்தக் கலையை பிரயோகம் செய்யக்கூடாது , என்றும் .
3) கற்றுக்கொடுத்த குருநாதரின் வாரிசுகளுக்குஎதிராக எந்தச் சூழ்நிலையிலும் இந்தக் கலையை பிரயோகம் செய்யக்கூடாது , என்றும் .
4) கற்றுக்கொடுத்த குருநாதர் உயிருடன் இருக்கும் வரை ,இதை யாருக்கும் நான் கற்றுக் கொடுக்கக் கூடாது ,என்றும்.
 5)உயிருக்கு ஆபத்தான சமயத்தில் இந்த வர்மக் கலையை பிறருக்கு எதிராக பிரயோகிக்க நேர்ந்தாலும் அவர்களை அடங்கல் முறைகளைக் கொண்டு தட்டி எழுப்பிவிட வேண்டும், என்றும்.வர்மத் தாக்குதலுக்கு இயற்கையாலோ செயற்கையாலோ, ஆளாகி இருக்கும் ஒருவனை இறக்கும்படி விட்டுவிடக்கூடாதுஅவர்களையும் அடங்கல் முறைகளைக் கொண்டு தட்டி எழுப்பிவிட வேண்டும்.என்றும்.
6)வர்மம் என்றாலே கர்மம் .அவை இறைவன் போட்டு வைத்த மர்ம முடிச்சுக்கள், எனவே எந்த வர்மத்தையாவது வர்மம் கற்றவன் தாக்குதலுக்குப் பயன்படுத்தினால் அதே வர்மத்தால் அவனுக்கு மரணம் நேரும், என்றும்.
7)வர்மத்தின் நல்ல பிரயோகங்களை அவத்தைப் படுபவர்களுக்கு பொருள் வாங்காது பிரயோகம் செய்ய வேண்டும் ,என்றும்.
பால் வைத்து சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுத்தார்கள்.

நான் எதற்காக வர்மம் கற்க நினைத்தேனோ அந்த நோக்கம் பின்னாளில் , மறைந்து துன்பப்படும் நோயாளிகளுக்கான வைத்தியத்திற்கான பிரயோகமாக அது மாறியது.

சரி இப்போது ரசமணி ,ரச மணி என்று சொல்கிறார்களே அது எது,எதற்கெல்லாம் பயன் பெறும்.எப்படி செய்வது என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் எனது தாத்தாவின் ஏட்டுப்பிரதியில் இருப்பதை அப்படியே ஒளி நகலாகத் தருகிறேன்.



இந்த ஏட்டுப் பிரதி எழுத்துக்கள் புரியாது எனபதால் அதில் கொடுத்துள்ள விஷயங்களை அப்படியே தருகிறேன்.கருவூமத்தை வேரைக் கொண்டு வந்து
பெரிய துவாரம் போட்டு கால் பலம் வாலை ரசம் (ஒரு பலம் என்பது 35 கிராம்)
விட்டு (அதில் குடைந்து எடுத்த) நடு வேரைக் கொண்டு மூடி ஏழு சீலை மண் செய்து(ஒரு சீலை மண் என்பது பருத்திக் காடாத் துணியில் களிமண் பூசி அதை மேற்படி வேரின் மேல் சுற்ற வேண்டும் ,இப்படி ஏழு தடவை சுற்ற வேண்டும்) கோழிப் புடம்போட தம்பனமாகும்(தம்பனம் என்றால் ஓடாமல் ரசம் கெட்டிப்படுதல்).(கோழி உட்கார்ந்து இருந்தால்  எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு உயரம் மாட்டுச் சாண எரு அடுக்கி புடமிடுதல்).அப்படி மூணு புடமிட கட்டிப்படும்.
அதை கையில் எடுத்து முள் முருங்கையிலை இரண்டு எடுத்து,இரண்டு பணவெடை மயில் துத்தம் பொடிசெய்து இலைக்குள் வைத்து பொட்டலம் கட்டி புதுச்சட்டியில் (புது மண்சட்டி) மேலே கட்டின ரசத்தை விட்டு கொதிக்கிற தண்ணீர் விட்டு பொட்டணங்கொண்டு நாலு நாழிகை எரித்தெடுக்க ரசமணியாகும்.அதை ஆறும் முன்பு ஊசியால் குத்தி கோர்த்து எடுத்து கட்டிக்கொள்ளலாம்.

எனக்கு தங்கள் விமரிசனங்களையோ,தங்கள் கருத்துக்களையோ எனக்குத் தெரிவித்தால், நன்றி நண்பர்களே!
பின்னொரு சமயம் வேறோர் விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி
சாமீ அழகப்பன்

Post Comment

17 comments:

  1. உங்கள் தாத்தா தவறான கருத்தினை எழுதியிருக்கிறார்
    ரசமணி உருகும் தன்மை வாய்ந்தவை, தண்ணீர் குடிக்கும் தன்மை வாய்ந்தவை , உண்மையான ரசமணி பொக்கிஷம்2 ஆசிரியர் ஷாஜஹான் வைத்திருக்கிறார்

    ReplyDelete
  2. ரச மணிகளில் ஆயிரக் கணக்கான வகைகள் இருக்கின்றன.தயாரிக்கும் முறைகள் அதைவிட அதிகம்.நமக்கு இப்போது தெரிந்திருப்பவை அவற்றுள் சிலவே,உங்கள் ஆசிரியர் வைத்திருப்பது ரசமணியாகவே இருக்கலாம்.அது ஒரு முறையில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம்.அந்த ஒரு தயாரிப்பு முறை மட்டுமே உலகில் இருக்கிறது எண்ணாதீர்கள். நான் கொடுத்திருக்கும் செய்முறைகள்,என் தாத்தா எழுதியது அல்ல.பல தலைமுறைகளாக நாங்கள் உபயோகித்து வரும் மருத்துவ குறிப்புகள் ஏட்டுப் பிரதிகளாக உள்ளது.அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் மிகச் சரியாகவே இருந்துள்ளன.அதில் பல வகைகளில் ரசமணி கட்டும் முறைகள் கூறப்பட்டுள்ளன.ரசம் நெருப்பில் பட்டால் ஆவியாகி ஓடிவிடும் தன்மை உள்ளது.நெருப்புக்கு ஓடாத மணியே ரசமணி.இந்த முறைகளை சோதித்துப் பார்த்து பின் தவறு என்றால் சுட்டிக் காட்டவும். ஏன் என்றால் இது எங்கள் பல தலைமுறை அறிவு.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
    Replies
    1. neengal solvathu unmai, enakum sila rasam kattum murai therium. poi endru koorum nabarkaluku vilakuvathu namaku alagu illai, orunaal unmai theriyavarum aiya avargale.

      THIRUMAL.S
      goldenthiru@gmail.com

      Delete
  3. மன்னிக்கவும் ஐயா உண்மையான ரசமணி யார்இடம்உள்ளது தெரிவிக்க வேண்டும்.i watch rasamani sir pls help me.

    ReplyDelete
  4. நன்றி திரு ரவி ஐயா அவர்களே,
    உண்மையான ரசமணி நிறைய பேர்களிடம் உள்ளது.
    அதனை சிறப்பான வழியில் செய்து தருவோம் என்று இந்த அதிகமான பேர்கள் நினைப்பதில்லை. ஏனென்றால் இவர்களுக்கு பணத்தின் மீது பற்றுக் கிடையாது.எனவேதான் போலிகளும்,ஏமாற்றுப் பித்தலாட்டக்காரர்களும்,தான்தான் உண்மையான ரச மணி வைத்துள்ளதாக சொல்லி பணம் பறித்துத் திரிகிறார்கள்.ஆமாம் நான்தான் உங்களுக்கு ரச மணி தயாரிக்கும் விதமே சொல்லித் தந்துவிட்டேனே, பிறகென்ன நீங்களே செய்து பார்த்துக் கொள்ளுங்களேன்.ஏன் இன்னும் வெளியிலேயே ஆளைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. இரசமணி- அதை எப்படிப் பயன் படுத்துவது?
    எங்கே வாங்குவது-
    எவ்வளவு செலவாகும்-
    உண்மைத் தகவல் பெற்றேன்.
    நன்றிகள்-
    1-416-995-0416

    ReplyDelete
  6. iya thankal udavikku nanree neeraya pear kidaitha visayathai maraithu vidukindranar thankarallipole silararl than namathu thamil visayangal kakkappadukindrathu matrum valarkkappadukindrathu adutha santhathikalikku othaviyaka ullathu melum rasamani patri kooriyathu arumai entha rasam kondu entha maniyai katta vendum ivaikalin suthimurai maraippaka vullathu unmayana suthi murai enna enna entha maniyai saranai eatri obayokam seithal megavum visesamaka irukkum enave saranai viparangal enna enna endha endha saranai eatrinal endha manien vesasam enbathai theriyapaduthavum ungal savai thodarndu namadu thamil makkalukku thevai mendum varukiren nanri maskumareshraja

    ReplyDelete
  7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு maskumareshraja அவர்களே,சித்தர்கள் விஞ்ஞானம் என்பது ஒரு கடல்.அதில் நீந்துவதும் இன்பம்.சுவைப்பது இன்பம்.கேட்பது இன்பம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  8. அன்புடன் ஐயா,

    முல் முருஙகை இலை எஙகு கிடைக்கும் ? எப்படி இருக்கும் ? தயவுசெஇது தெரிவிக்கவும்,உமததை இல் கரு வோமதை எப்படி இருக்கும் தயவு செஇது தெரிவிக்கவும். நன்ரி .யாறோ

    ReplyDelete
  9. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு அனாதி அவர்களே, முதலில் நீங்கள் உங்களை நீங்கள் உங்களை நன்கு வெளிப்படுத்திக் கொண்டு பின் சந்தேகங்களை கேளுங்கள்.உங்கள் பெயரை வெளிப்படுத்திக் கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்.தமிழில் ஏன் இவ்வளவு பிழைகள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  10. Dear mr,Samy, thank you just recently i got
    your blog the informations are
    very usfull but if you can give
    the more deatials it will be more
    usfull. iam from tamilnadu,my
    father was a VATHIEAR from him
    and with his friends i learn
    little in the help of almighty god
    just recently i got you and i
    hope with your kind help i can
    learn more, thanks, k. amir sultan.

    ReplyDelete
  11. aiya, ungal rasi mani seimurai pattri padithen.enakku ithai pattri avalavaaga theriyathu endraalum ithil nambikaiyum eedupaadum ullathu. pona maatham oru jodhidarai paarka sendruirunthen, avar sollum munname enakku seivinai kolaaru irupathu enakku theriyum, aanal athai edukkum muraiyo illai athai yaar sariya edupaargal endra vibaram enakku theriyaathu. irunthaalum rasimaniyaal intha seivinai kolaarugal agalum endru padithu irukiren. antha jodhidar, enaku oru rasa mani seithu tharuvathaaga sonnaar, athai pottu kondaal intha seivinai kolaarugal poividum endrum sonnar, aanaal avar tharum mani yentha alavuku ithai seiyum endru epadi naan therinthukolvathu, nambuvathu?. enoda iyathai theerpeergalaaga
    saravanan

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா. என் பெயர் மோகன். மகரம் திருவோணம். இருப்பிடம் கோலாலும்பூர் மலேசியா.தமிழ்நட்டிலிருந்து வந்திருந்த ஒருவர் ரசமணி என்ற பெயரில் மெர்குரி உருண்டை ஒன்றை கொடுத்தார். அது அடக்கடி கறுத்து விடுகின்றது. என் ராசிக்கு ரசமணி அணியலாமா? தரமான ரசமணி எங்கே கிடைக்கும்? நன்றி ஐயா.
    இமெயில் : mohan.ppdpd@gmail.com

    ReplyDelete
  13. ஐயா வணக்கம் நான் அழகர் சாமி மும்பையில் இருக்கிறேன் உண்மையான இரசமணியை கண்டறிவது எப்படி

    ReplyDelete
  14. நித்ய ஞான மயன் சென்னை : புதிய மண் பாத்திரத்திரத்தில் கட்டிய இரசம் அதோடு கூடவே முள்முருங்கை இலைகளுள் துத்தம் வைத்து கொதிக்கும் தண்ணீர் விட்டு மேலும் நாலுசாமம் எரித்தெடுக்க வேண்டும் என்பது சரியா?

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்