மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, December 20, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 52)கலிக்கம் 3


இதற்கு முந்தைய பதிவு சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 51) கலிக்கம் 2 படித்த பின் இந்தப் பதிவையும் சேர்த்துப் படிக்கவும்.


கண்ணுக்கு இடும் முக்கிய கலிக்க(கண்ணிலிடும் மருந்து) மருந்தை இங்கே விவரிக்கிறேன்.
(1)தும்பைப் பூ- 60 எண்ணம்
(2)களாப் பூ - 60 எண்ணம்
(3)மிளகு (சுத்தி செய்தது) - 20 கிராம்   
(4) நல்லெண்ணெய் - 200 மி லிட்டர்
மிளகை ஒன்றிரண்டாகத் தட்டி, மேற்படி எல்லாச் சரக்குகளையும் ஒரு கலரில்லாத ஒரு பாட்டிலில் ஊற்றி,இரண்டரை அடி ஆழத்தில் வெயில் படும் இடத்தில் மண்ணில் புதைக்கவும்.நான்கு நாட்கள் கழிந்தவுடன்,எண்ணெயை மட்டும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.வெள்ளியினால் செய்த கம்பியியில் தோய்த்து ஓரிரு துளிகள் வீதம் கண்ணுக்கு கலிக்கமாக விட்டு வர,சிரசில் உள்ள நீர் கண்கள் வழியாகவும்,நாசிகள் வழியாகவும் வெளியேறும்.கண்ணெரிச்சல், வெப்பம் , வாத, பித்த,சிலேற்பனமாகிய முக்குற்றங்களும் நீங்கும்.ஆரோக்கியமான தேகமுடையவர்கள்,வருடத்திற்கு இரு முறையாவது இம்முறையைக் கடைப் பிடிக்க வேண்டும்.


அடுத்த கட்டுரையில் ஆரோக்கிய வாழ்விற்கான நசியம் (மூக்கில் மருந்து)இடுதலை பார்ப்போம்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 51)கலிக்கம் 2


இதற்கு முந்தைய பதிவு சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 50) கலிக்கம் 1 படித்த பின் இந்தப் பதிவையும் சேர்த்துப் படிக்கவும். 


கலிக்கம்:- கண்ணில் விடும் மருந்துகளால் உடல் நோய்களை குணமாக்குதல்.

இங்கு கண்ணில் விடும் மருந்துகளை (கலிக்கம்) பார்ப்போம்.
இந்தக் கண்ணில் விடும் மருந்துகள் கண்ணில் உள்ள நோய்களைக் குணமாக்குவததோடு,இரத்த ஓட்டத்தில் உடனடியாகக் கலப்பதன் மூலம் உடலில் ஏறிய விஷம், வர்மம்,வாதம் 80,நெடு மயக்கம்(கோமா),மூளையில் ஏற்படும் இரத்த உறைவு(அதன் மூலம் ஏற்படும் பக்க வாதம்) ஆகியன தீரும்.


ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான மருந்துகளும் உள்ளன.மொத்தமாக நமது நலத்தைப் பெருக்க (நோயணுகா விதி) நோயணுகவிடாமல் தடுக்க உள்ள வழிமுறைகள் என்னும் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள கலிக்கத்தை இங்கே தருகிறேன்.


அஞ்சனம்:- அஞ்சனம் என்பது கண்களுக்கு தீட்டும் மையே!!!
பார்வதி தேவியை,அஞ்சன மையிடும் அம்பிகே!!!  என்றழைப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.பெண்கள் மட்டுமே கண்ணில் மையிடுவார்கள் என்பது தவறு.பெண்களும்,ஆண்களும் கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம்.அதன் மூலம் பல நோய்கள் நம் உடலை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளலாம். 


அஞ்சனக்கல் என்ற சுறுமாக்கல்லை பன்னீர் விட்டு இழைத்து கண்புருவங்கள்,கண் பட்டை,லலாட மத்தி என்று அழைக்கப்படும் நடு நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள நெற்றிக்கண் எனப்படும் புருவப்பூட்டு 90 நாட்களில் திறக்கும்.
எனது உறவினரும் பலருக்கு ஆன்மீக குருவாகத் திகழும் ஆன்மீகச் செம்மல் அமரர் திரு மிஸ்டிக் செல்வம் அவர்களும் இதைப் பற்றி தமது ஆன்மீகத் திறவுகோல் என்ற நூலில் விவரித்துள்ளார்.


முஸ்லீம் அன்பர்கள் ஒவ்வொரு தொழுகையின்போதும் இந்த சுருமாவை கண் பட்டைகளில் போட்டுப் பின் தொழுகை செய்வதை கடமையாகச் சொல்லி இருக்கிறார்கள்.


கண்மை தயாரிக்கும் முறை:- வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளைத் தண்ணீர் சேர்க்காமல் இடித்துச் சாறு எடுக்கவும்.25 செமீ நீள அகலமுள்ள வெள்ளைத் துணியை எடுத்து அந்தச் சாற்றில் ஓரிரு முறைகள் சாறு காலியாகும் வரை உலர்த்தி,மீண்டும் தோய்த்து மீண்டும் உலர்த்தி,பின் அந்தத் துணியை உருட்டி திரியாகச் செய்து கொள்ள வேண்டும்.பின் விளக்கெண்ணெயை ஊற்றிய விளக்கில்,மேற்படி கரிசலாங்கண்ணிச் சாறு ஊட்டிய திரியைப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.


 ஒரு புது மண் சட்டியில் தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச் சாற்றை ஐந்து தடவை,தடவி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்தச் சட்டியை அந்த விளக்கின்மீது மூன்று புறமும் செங்கலிட்டு காற்று உள்ளே புகுந்து விளக்கு எரியுமாறு கவிழ்த்து வைத்துவிடவும்.அந்த விளக்கு தொடர்ந்து எரியுமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.


மறுநாள் அந்த கற்றாழை தடவிய புதுச் சட்டியில் படிந்திருக்கும் கரியை வழித்தெடுத்து போதுமான அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டுக் குழைத்து வெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி கண்ணுக்கு தீட்டி வர கண் ரோகங்கள் அனைத்தும் குணமாகும்.கண்ணொளி ஒரு காதந் தூரம் காணும்.அதாவது ஒரு காத தூரம் இருக்கும் பொருள்களும் கண்ணுக்குத் தெரியும்.


இப்படிப்பட்ட வெள்ளைக் கரிசலாங் கண்ணி,மஞ்சள் கரிசலாங் கண்ணி,மற்றும் பொன்னாங் கண்ணி, ஆகியவற்றுக்கு சோழர்கள் காலத்தில் வரி விதிக்கப்பட்டது.அதற்கு கண்ணிக் காணம் என்று பெயர்.வரி செலுத்தினாலும் இதன் அருமை மற்றும் பெருமை எண்ணி அக்காலத்தில் உபயோகித்தார்கள். இன்றோ நாம் இலவசமாய்க் கிடைத்தாலும் உபயோகம் அறியாது,இதன் அருமை மற்றும் பெருமை தெரியாது வெளிநாட்டு விஷங்களை மருந்தென்று பெருமை பேசித் திரியும் அவலம் நேராது.


வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல் இருப்பதில்லை.காரணம் இது போன்ற மிக நல்ல வழக்கங்கள் வழக் கொழிந்து போனதே!!!கண்மைக்கு போய் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது????
கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும்,குற்றங்களும்,நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.


அக்குபஞ்சரில் சோடா புட்டிக் கண்ணாடி மாட்டிக் கொண்டு உள்ள நபரை (லிவர் மேன்)ஈரல் குறைபாடுள்ள மனிதன் என்பார்கள்.இப்போது புரிகிறதா கண்ணுக்கும் ஈரலுக்கும் உள்ள தொடர்பு?????


பதிவு மிகப் பெரியதாகப் போய்விட்டது.சொல்ல நிறைய விடயம் இருப்பதால் பதிவை மூன்றாகப் பிரித்து தொடர் பதிவாக பதிவிடுகிறேன்.அடுத்த பதிவு சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 52)கலிக்கம் 3 ஐ சேர்த்துப் படிக்கவும். 
   
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment