மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, January 30, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(25)


தமிழ் மொழியின் தொன்மை அளப்பிடற்கரியது.இந்த மொழியில் இருந்துதான் உலக மொழிகள் தோன்றின என்று ஆராயும் அளவிற்குத் தொன்மை வாய்ந்த மொழி.பழைமையான ப்ராமி எழுத்துக்களாலும்வட்டெழுத்து சங்கிலி எழுத்துக்களாகவும் எழுதி வரப்பட்டது. இப்போது தமிழ் விஞ்ஞான பூர்வமாகவும் உச்சரிப்பு ரீதியாகவும் வாய் மொழி உத்தரவுகளை(VOICE COMMAND) கணினிகள் புரிந்து கொள்ளும் விதமாகவும் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


மேலும் தமிழ் என்பது நம் சித்தர்களின் சர நூல் சாத்திர ரீதியாகவும் தமிழ் எழுத்துக்கள் இத்தனைதான் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது பற்றிய விவரங்கள் இதோ கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

உயிர் எழுத்துப் பன்னிரண்டும் வலது நாசியில் ஓடக் கொண்டிருக்கும் சூரிய கலையைக் குறிக்கும்.அதாவது அந்த சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதை 12 உயிரெழுத்துக்களாக்கி இருக்கிறார்கள்.நெடில் ஏழும்  உடலில் உள்ள ஏழு சக்கரங்களைக் குறிப்பன.இதைக் குறிக்கவே திருக்குறளில் ஏழு சீர்களை வைத்துள்ளார். மேலும் 133 அதிகாரங்களையும் வைத்துள்ளார். அதாவது 1+3+3=7.

குறில் எழுத்து ஐந்தும் ஐந்து பஞ்ச பூதங்களையும், பொறிகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள்,புலன் ஐந்தைக் குறிக்கும்.நெடில் ஏழு எழுத்துக்களும்,குறில் ஐந்து எழுத்துக்களும் வைத்ததன் மற்றொரு காரணம் மனிதன் நெடிய ஆயுள்,நெடிய புகழ், நெடிய ஞானம் பெற வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு குறிலை குறைவாகவும் நெடிலை அதிகமாகவும் வைத்தார்கள்.

மெய்யெழுத்துக்கள் 18 வைத்ததன் காரணம் இடது நாசியில் ஓடும் சந்திர கலை 16 அங்குலம் ஓடுகிறது.அத்துடன் மனம், உயிர் இரண்டும் சேர்ந்து 18 மெய்யெழுத்துக்களாக வைத்துள்ளார்கள்.இந்தப் பதினெட்டு மெய்யெழுத்துக்களைக் குறிப்பாகக் கொண்டே சித்தர்கள் பதிணெண்பேர், தேவாசுர யுத்தம் 18 வருடம், இராம ராவண யுத்தம் 18 மாதங்கள், மகாபாரதப் போர் 18 நாள், சேரலாதன் இமவானுடன் போர் செய்தது 18 நாழிகை,அய்யப்பன் கோவில் படி 18, 18ம் படிக்கருப்பசாமி என்பதுவும், யோகாசனத்தில் உள்ள தடைகள் 18 ,இப்படி 18 ஆக வைத்துள்ளார்கள்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு,ஒரு நாழிகையான 24 நிமிடத்திற்கு 360 மூச்சு(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ), ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே 216 உயிர் மெய் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன.


மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஆயுள் 120 வருடம்.மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே! 

மேலும் தனிநிலை என்பதான ஆயுத எழுத்தை முக்கண் முதல்வனான பரமசிவனுக்கு இணையாக வைத்தார்கள்.

தமிழ் என்ற சொல்லே ஒரு வல்லெழுத்து(த), மெல்லெழுத்து(மி), ஒரு இடையின எழுத்து(ழ்) எனக் கோர்த்து உருவாக்கப்பட்டது.

இப்படி தமிழ் மொழி எழுத்துக்கள் பல காரணங்களை வைத்து எழுத்தாக்கம் செய்துள்ளார்கள்.ஆனால் எவ்வித அறிவும் இல்லாமல் அறிஞர்கள் என்று சொல்லும் சிலர், எழுத்துச் சீர்திருத்தம் என்றும் கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்று கூறித் திரிகிறார்கள்.


கிளவியாக்கம் என்பது சொல்லாக்கம் என்பதுவே!இந்த சொல்லாக்கப்படுவதற்கு பல விதிமுறைகளோடு இயற்கையோடு இயைந்த மொழி நம் தமிழ்மொழி! 

தமிழர்களைக் கொல்கிறார்கள் என்றால் தமிழையும் கொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.தமிழ்த் தாய் வாழ்த்தில் கூறியது போல உலக வழக்கு அழிந்து,ஒழிந்த ஆரியம் போல் இராமல் இளமைப் பொலிவோடு இருக்கும் தமிழணங்கை சீரழிக்க வடமொழி அறிஞர்கள் வடமொழியில்,இறந்து போன கிரந்த எழுத்துக்களை மீண்டும் உயிரளிக்க, தமிழில் ஒருங்குறியாக்கத்தில்(UNICODE) கிரந்த எழுத்துக்களைச் சேர்க்க முயற்சி நடந்து(UNICODE CONSORTIUM) வருகிறது.

ஞானத் தமிழ் மொழி நம் தமிழ்.அது சாகாமல் காப்பாற்றும் முயற்சி நாம் கண்டிப்பாக எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.விழிப்புணர்வு பெறுவோம்.


இதையும் பாருங்க!!!!
http://groups.google.com/group/theyva-thamizh/browse_thread/thread/652838d48e5cfd1b?hl=ta#

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

Thursday, January 27, 2011

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 9

அக்கு பஞ்சர் அறிவோமா:-
பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.

நான் ஒரு முறை ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறு கைக்குழந்தையை தூக்கி வந்திருந்தார்கள்.அப்போது அங்கு கிராமத்து மருத்துவச்சி அங்கே வந்திருந்தார்.

அந்தக் குழந்தைக்கு குடல் ஏறியிருக்கிறது என்று குழந்தையின் தாய் கூறினாள்.அந்த மருத்துவச்சியும் குழந்தையின் முழங்கையின் மேல் பகுதியில் கையின் பின் பக்கத்தை பிடித்தவுடன் குழந்தை வீரிட்டு அழுதது.

ஆமாம் குடல் ஏறியிருக்கிறது. இனிமேல் குழந்தையைப் யாரையும் பார்த்து தூக்கச் சொல்லுங்கள்.சிறு குழந்தைகளைவிட்டுத் தூக்கச் சொல்லாதீர்கள் என்றார் மருத்துவச்சி.

நான் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.அந்த மருத்துவச்சியைப் பார்த்துக் கேட்டேன்.குடல் ஏறி இருந்தால் வயிற்றையல்லவா பார்க்க வேண்டும், நீங்கள் மேற்கையின் புறத்தை அழுத்தி பார்த்துவிட்டு குடல் ஏறி இருக்கிறது என்று கூறுகிறீர்களே! என்று கேட்டேன்.

அதற்கு அந்த பெண்மணி கூறினார்கள்,இது போன்றே நாங்கள் பல தலைமுறையாக வைத்தியம் பார்த்து வருகிறோம்.நாங்கள் சொன்ன சொல் தப்பினது இல்லை,மிகச் சரியாக இருக்கும் என்றார்கள்.அதன் பிறகு அந்தக் குழந்தைக்கு வயிற்றின் மேலிருந்து கீழ்ப்புறமாக மட்டும் விளக்கெண்ணெய் தடவி மேலிருந்து கீழ்ப்புறமாக மட்டும் சீவினாற் போல அழுத்தி தேய்த்து தடவி விட்டவுடன் குழந்தை குணமானது.பிறகு அதே இடத்தை தொட்டால் அழவில்லை. குழந்தை குணமானதைப் புரிந்து கொண்டோம்.  

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின் அக்கு பஞ்சர் கற்றுக் கொண்ட பின் இதற்கான விளக்கம் கிடைத்தது.

பெருங் குடல் சக்தி நாளம் 
சிறு குடல் சக்தி நாளம்

படத்தைப் பாருங்கள்.சிறு குடல் மற்றும் பெருங்குடல் சக்தி நாளங்கள் கையின் மேல் புறம் மற்றும் கீழ்ப் புறம் ஓடுவதைக் கவனியுங்கள்.

அக்கு பஞ்சரில் அஹ் - ஷி புள்ளி (AH - SHI POINT) எனக் கூறுவார்கள்.அதாவது அந்தப் புள்ளியைத் தொட்டாலோ அழுத்தினாலோ அஹ் வலிக்கிறதே என்ற  வேதனையொலி வாயிலிருந்து கிளம்பும்.இதே சிறு குழந்தையாக இருந்தால் வீரிட்டு அழும்.

சிறுகுடல் மற்றும் பெருங்குடலுக்கான அஹ் - ஷி புள்ளிகள் (AH - SHI POINT) இந்த இடத்தில் நிலை கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

மேலும் பெருவிரலுக்கும் மற்ற நான்கு விரல்களுக்கும் இடைப்பட்ட வர்மப் பகுதியை கவளி வர்மம் என்று கூறுவார்கள்.வெற்றிலைக் கவளி என்று கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.கைக்கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரல்களுக்குமிடையே வைத்திருக்க முடியும் அளவு வெற்றிலையே ஒரு கவளி வெற்றிலை என்பார்கள்.

இந்த கவளி வர்மம் எல்லா வர்மங்களை இளக்கும் பகுதியாகும்.இது அக்குபஞ்சரில் பெருங்குடல் சக்தி நாளத்தின் நாலாவது புள்ளியாகும்(HOKU).அதை LI 4 என்பார்கள்.அதற்கு உடம்பில் உள்ள கெட்டதை நீக்கும் பெரிய புள்ளி(GREAT ELIMINATOR) என்றழைக்கிறார்கள்.

பெருங்குடல் சக்தி நாளத்தின் நாலாவது புள்ளி(HOKU)
LI 4 (LARGE INTESTINE 4)
மேற்கண்ட புள்ளியில் சிகிச்சை அளிப்பதன் மூலம் கீழ்க்கண்ட வியாதிகளைக் குணப்படுத்தலாம்.இது உடலிலுள்ள முக்கியமான 6 தொலைவுப் புள்ளிகளில் ஒன்று.
(1)HEADACHE தலைவலி(2)TOOTHACHE பல்வலி 3)MIGRAINEஒற்றைத் தலைவலி(4)TRIGEMINAL NEURALGIA கடும் நரம்பு வலியால் ஏற்படுவது (5)PAIN AND PARALYSIS OF THE UPPER EXTREMITY இடுப்பின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகள் மற்றும் வாதம்.  (6)RHINITIS(7)PHARYNGITIS(8)FACIAL PARALYSIS முகவாதம்(9)GOUTமுன் கழுத்து கழலை(10)PAINFUL CONDITIONS OF EYE கண்வலி (11)HYPERHYDROSIS (12) MANDIPULAR ARTHRITIS(13)LARYNGITIS(14)BRONCHITIS சுவாச காசம்(இரைப்பிருமல்)

IF YOU WANT TO USE SINGLE POINT IN THE BODY FOR PAIN LI 4 IS THE POINT.IT IS USEFUL IN ALL TYPES OF ARTHRITIS.IT TONES UP THE ENTIRE LARGE INTESTINE FUNCTION.IT ACTS AS AN ELIMINATOR OF PHYSICAL AND MENTAL TOXINS OR TENSIONS. IT IS USED FOR PAIN AND PARALYSIS OF UPPER LIMB.
IT IS ALSO USEFUL IN
(1)ALL KIND OF HEADACHE ARISING OUT OF FAULTY ELIMINATION
(2) INFLAMMATION OF MOUTH, EYES, NOSE, SINUSES, AND TEETH.
(3) FEVER WITH THIRST AND FEVER WITH SHIVERING.
(4) IN SKIN CONDITIONS LIKE BOILS AND ACNE.
(5) PAIN RELIEF POINT IN SURGICAL ANESTHESIA.
(6) IT IS USED AS A MAJOR ANALGESIC POINT IN PAINLESS CHILDBIRTH.

சித்த வைத்தியத்தில் எந்த வியாதிக்கும் முதலில் நாடி பார்க்கும் போது கால் பங்கு வியாதி குணமாகும் .அந்த வியாதியும் வைத்தியன் உடம்பில் சேராமல் இருக்க வேண்டுமானால்,நாடி பார்க்கும் கையில்  பட்டுத் துணி போர்த்தே பார்க்க வேண்டும்.பார்த்த பின் நாடி பார்த்த கையை தரையில் மூன்று முறை தட்ட வேண்டும்.அப்போதுதான் அந்த வியாதி வன்மை (NEGATIVENESS OF THE PATIENTS BODY) வைத்தியரைத் தாக்காது பூமிக்குப் போய்விடும் (GROUNDED) என்று அகத்தியர் நாடி சாஸ்திரம் கூறுகிறது.

மலக் குடலான பெருங்குடலைச் சுத்தப்படுத்த பெரு மலம் போக்கிகளைக் (PURGATIVES) கொடுத்து மீதி வியாதியில் அரைப் பங்கை குணம் ஆக்குகிறார்கள் சித்த வைத்தியர்கள்.பின் மீதி உள்ள கால் பங்கு வியாதியைத்தான் சித்த வைத்தியர் மருந்தைக் கொடுத்து குணம் அளிக்கிறார்கள்.

பெருங்குடலை ஏன் சித்த வைத்தியர்கள் ஏன் சுத்தப்படுத்தினார்கள் என்று எனக்குப் புரிந்துவிட்டது. உங்களுக்கு புரிந்ததா! கருத்துரையிடுங்கள்! 


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

Wednesday, January 26, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(24)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 5)

 வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(22)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 4) ன் தொடர்ச்சியே!!! அதைப் படித்துவிட்டு பின் இந்தப் பதிவுக்கு வாருங்கள்.அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாது புரியும்.


வாஸ்து புருஷன் தன் தலையை புரட்டாசி,ஐப்பசி கார்த்திகை மாதங்களில் கிழக்கில் தலை வைத்துப் படுத்திருப்பார்.


மார்கழி,தை, மாசி மாதங்களில் தெற்கில் தலை வைத்துப் படுத்திருப்பார்.


பங்குனி,சித்திரை,வைகாசி மாதங்களில் மேற்கில் தலை வைத்துப் படுத்திருப்பார்.


ஆனி,ஆடி,ஆவணி,மாதங்களில் வடக்கில் தலை வைத்துப் படுத்திருப்பார்.


வாஸ்து புருஷன் பார்க்கும்(திருஷ்டி) திசையிலாவது, கால் புறம் உள்ள திசையிலாவது வாசல் வைத்து வீடுகட்ட கூடாது.அதாவது வாஸ்து செய்யும் எல்லாக் கிழமைகளிலும் எல்லா திசைகளிலும் வாசல் வைப்பவர்களும் வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது.


(எ-கா) புரட்டாசி,ஐப்பசி மாதங்களில் கிழக்கில் தலை வைத்துப் படுத்திருந்தால் கால் மேற்கில் இருக்கும். மேலும் தெற்கே பார்த்துப் படுத்திருப்பார்.எனவே தெற்கு வாசல் மற்றும் மேற்கு வாசல் காரர்கள் இந்த மாதங்களில் வாஸ்து செய்யக் கூடாது.கிழக்கு மற்றும் வடக்கு வாசல்காரர்கள் இந்த மாதங்களில் வாஸ்து செய்யலாம்.
  
வாஸ்து புருஷன் சூரியன் நிற்கும் ராசிகளில் காலும்,அதற்கு எதிர்ராசிகளில் தலையும் வைத்துக் கொண்டு,இடது கை கீழும் வலது கை மேலுமாக படுத்திருப்பார்.


சூரியனும், வாஸ்து புருஷனும் ,எதிர் எதிராக ராகு கேதுவைப் போல் இருப்பதனால், சூரிய சக்தி எந்த மாதங்களில் தலைவாயிலில் நுழையுமோ,அந்த மாதங்களில்தான் அந்தந்த திசையில் தலை நுழைவாயில் அமைக்கவுள்ள வீட்டுக்கு கால்கோள் இட வேண்டும்.

இப்போது இன்னோர் விடயமும் கூறுகிறேன்.சூரியன் எந்த ராசிக்கட்டத்தில் இருக்கிறதோ அதை வைத்தே நீங்கள் பிறந்த மாதத்தை கூறிவிடலாம்.


சித்திரை = மேடத்தில் சூரியன்
வைகாசி = ரிடபத்தில் சூரியன்
ஆனி = மிதுனத்தில் சூரியன்


ஆடி = கடகத்தில் சூரியன்(கடக ரேகையை நோக்கி சூரியன் நகர்வதால் இது தட்சியாண கால ஆரம்பம்.  ஆடி மாதத்தில் இருந்து மார்கழி வரை தட்சிணாயனம். இந்த மாதங்களில் குளிர்ச்சி இருக்கும்.)
ஆவணி = சிம்மத்தில் சூரியன்
புரட்டாசி = கன்னியில் சூரியன்
ஐப்பசி = துலாத்தில் சூரியன்
கார்த்திகை=விருச்சிகத்தில் சூரியன்
மார்கழி = தனுசு ராசியில் சூரியன்


தை = மகரத்தில் சூரியன்(மகரத்தில் சூரியன் நுழைவதால் இதுவே மகர சங்கராந்தியாகவும், சூரியனுக்கு விவசாயப் பெருமக்கள் ந்ன்றி சொல்லும் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.இதுவே உத்தராயண(சூரியன் மகர ரேகையில் பிரவேசிக்கும் காலம்) கால ஆரம்பம்.தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயனம். இந்த மாதங்களில் அதிக சூடு இருக்கும்.)


மாசி = கும்ப ராசியில் சூரியன்
பங்குனி = மீன ராசியில் சூரியன்


இப்படியே சூரியன் நிற்கும் ராசிக் கட்டத்தை வைத்து நீங்கள் பிறந்த மாதத்தை கூறிவிடலாம்.



பதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் (மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் ஐந்தில் காணுங்கள்)

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

Sunday, January 23, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(23)

அன்புள்ள பதிவு வாசகர்களே,
சென்ற வாரம் எனது பதிவு வாசகியான திரு வினொதினி அவர்கள்///அடிக்கடி பதிவை நிறுத்திடுவேன், நிறுத்திடுவேன் என்று சொல்லி பயமுறுத்தாதீர்கள். தங்களுக்கு comments போடநினைத்தால் நல்லாயிருக்குநல்லா எழுதுறீங்க என்று மட்டும் தான் பொதுவா எல்லோராலும் சொல்ல முடியும். அதை எத்தனை தடவை தான் போடுவது? ஏனெனில் நீங்கள் எழுதும் Subject வித்தியாசமானது. பொதுவா அது பற்றி எல்லோருக்கும் தெரியாது. அதனால் விவாதிக்க முடியாது. அத்துடன் அது சீரியஸ் மாற்றா் என்பதால் ஜோக்கும் விடமுடியாது. வியந்து பார்த்து அறிந்து கொள்ள மட்டுமே முடியும். எனவே இனி வாசகர்களை தயவு செய்து பயமுறுத்தாதீர்கள். தொடர்ந்து செல்லுங்கள். வாழ்த்துக்கள்./// என்று குறிப்பிட்டார்கள்.

பதிவை நிறுத்திவிடுவேன் என்று பல தடவை நான் கூறவில்லை.ஒரே ஒரு தடவை குறிப்பிட்டேன்!பயமுறுத்த எனக்கு எவ்விதத்திலும்,அனுமதியும் கிடையாது.


எனக்கு தெரிவித்த மாதிரி இறைவன் எல்லோருக்கும் தெரிவிக்க மாட்டானோ!என்றெண்ணித்தான் இப்படிச் சொன்னேன்! ஆனாலும் மக்கள் படும் துயர் என் கண்ணில் வரவழைக்கும் கண்ணீர் உங்களுக்குத் தெரியாது!ஆனாலும் மக்கள் தங்கள் துயரை தாங்களே தீர்த்துக் கொள்ள முடியாமல் இருக்கும் இந்த நிலைதான் மிகவும் மனம் வருந்தும் நிலை.

பாரதியார் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ''நெஞ்சு பொறுக்குதில்லையே!என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது'' கீழ்க்கண்ட ஒளிக்காட்சிகளைக் காணுங்கள்.











மற்றபடி நான் யார் உங்களுக்கு வரும் உணர்வுகளை இறைவன் உணர்த்துவதைத் தடுக்க!நான் யார் என் பதிவைத் தடுக்க!நீங்கள் கேட்டால் நான் எதைத் தர மறுப்பேன்.

இறைவன் மனித ரூபத்தில் வந்திருக்கிறான்,வந்து கொண்டும் இருக்கிறான், இனியும் வருவான்.மனித ரூபத்தில் வந்து தன்னலமில்லாமல் கேட்டால்,அது இறைவனே எனக் கொண்டு என்னுயிரைக் கேட்டாலும் தருவேன்.

உங்களுக்கு என்ன உடற் பிரச்சினை கேட்டாலும், நான் எந்த எதிர் பார்ப்பும் இன்றி கூறத் தயார். நான் சாதாரணமானவன். என்னிடம் ஒன்றும் இல்லை. நீங்கள் தட்டினால் திறப்பேன்.கேட்டால் கொடுப்பேன். நான் ஒரு வாயிற்காப்போன்.

நான் சுய உணர்வுடன் இருக்கும் காலம் சில காலம்.அதற்குள் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் உரைக்கும் வார்த்தை என்று கொள்ளுங்கள். சித்தம் போக்கு சிவன் போக்கு என்று கொள்ளுங்கள். ஆனால் நான் எப்போது நிற்பேன் என்று எனக்குத் தெரியாது, நடப்பேன் என்று தெரியாது. 

எனது வலைப்பூவில் இணைப்பு கொடுத்திருக்கும் உறவுக்காரன் வலைப்பூவின் ஆசிரியர் பாரதியாரின் பேரன்.அவர் துறவு கொள்ள, புத்த துறவிகளுக்கான பயிற்சியில் உள்ளார்.அது இறைவன் அவருக்குக் காட்டிய வழி.
  
தீர்மானிப்பவன் இறைவன். அது நீங்கள் என்றாலும் இறை எனக் கொள்வேன். தடுப்பவர்அல்லது கொடுப்பவர் யார் என்றாலும் அது இறை எனக் கொள்வேன்.எல்லாம் அவன் செயல்!உங்கள் கடிதத்தில் குறிப்பைப் பார்த்து வெகு நேரம் சிரித்தேன்.நான் பயப்படும் படியானவன் அல்ல!

இறைவனுக்கு லட்சார்ச்சனை ஏன் செய்கிறார்கள். அவன் நாமம் அவனுக்குத் தெரியாது என்பதற்காகவா! இறைவன் புகழ் பாடினால் இறைவன் தன் படைப்பு தன்னை மறக்கவில்லை என்று மகிழ்கிறான்.புகழ் பாடவில்லை என்றாலும்,இறைவன் வருந்துவதில்லை. அது போல நீங்கள் என்னைப் புகழ்ந்தாலும் சரி!விமரிசித்தாலும் சரி! இரண்டும் ஒன்றுதான்.

நான் இறைவனின் பேனா மட்டுமே! இந்தப் வலைப் பதிவின் படைப்புகளெல்லாம் இறைவனுடையவை. ஒரு கவிஞனின் பேனா,கவிஞன் எழுதும் கவிதைகளைப் படைத்ததாக மகிழ்ந்து கொண்டால் அது எவ்வளவு முட்டாள்தனமோ, அது போல என் படைப்பை, என் படைப்பு என நான் நினைப்பதுவும்.என் படைப்பை நீங்கள் புகழ்ந்தாலோ, அது இறைவனைப் புகழ்ந்த மாதிரியே! புகழவில்லை என்றாலும் ஒன்றுமில்லை.

நான் வேறல்ல இறைவன் வேறல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்!நீங்களும் இறைவனும் வேறல்ல என்பதை, நீங்களும் உணருங்கள்.

இது அகங்காரமல்ல,அது போலத் தெரிந்தாலும் இதுதான் உண்மை!நீங்கள் சொன்னால் நிறுத்துவதும்,மீண்டும் ஆரம்பிப்பதுவும் அகங்காரமில்லையல்லவா,அதுபோல் இதுவும் அகங்காரமில்லை.


அஹம் பிரம்மாஸ்மி! 


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment