மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, October 23, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 46)கருணை

அன்புள்ள பதிவு வாசகர்களே,

முதலில் தாமதத்திற்கு வருந்துகிறேன்.நான் சென்ற மாதம் மதுரை அருகே உள்ள அழகர் கோயில் சென்றிருந்தேன்.அங்கே உள்ள சிறப்புக்கள் பல, அவற்றில் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

அங்கே மாலை 6.30 மணிக்கு மட்டும் தினமும் தோசை பிரசாதம் கொடுப்பார்கள்.மாலை 4 மணிக்கே அதற்கு பதிவும் செய்யலாம்.அந்த தோசை சுடப்படுவது ஒரு சிறப்பு வாய்ந்த தோசைக் கல்லில் என்பதே அதன் சிறப்பு.அழகர் கோவில் மூல விக்கிரகம் எந்த உலோகக் கலவையால் செய்யப்பட்டிருக்கிறதோ, அதே உலோகக் கலவையால் செய்யப்பட்டுள்ளது.




மூலவர் விக்கிரகத்தில் அபரஞ்சிப் பொன் என்ற உயர்ந்த பொன் சேர்க்கப்பட்டுள்ளது.அந்தப் பொன் உடலில் சேர்ந்தால் உடலில் நோய்கள் அணுகாது.ஏழைகளும் பயன் பெறும் வகையில் அந்நாளில் சித்தர்கள் செய்து வைத்த ஏற்பாடுகள் பல.அவற்றுள் ஒன்றே இது.

மேலும் பல கோயில் தலங்களில் இது போன்ற பல உடல் நலம் காக்கும் ஏற்பாடுகளை சித்தர்கள் செய்துள்ளனர்.மேலும் இந்த அழகர் மலையில் மேலே ராக்காச்சி அம்மன் கோயில் ஒன்றுள்ளது.அங்கே ஒரு எந்திரம் ஸ்தாபனம் செய்து வைத்துள்ளார்கள்.அதனடியில் இருந்து ஒரு எந்நாளும் வற்றாத ஊற்றொன்று வந்து கொண்டிருக்கிறது.

அதன் தண்ணீரை நாற்பத்தெட்டு நாட்கள் அருந்தினால் தீராத நோயெல்லாம் தீரும் என்று சித்தர்கள் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே போல மலையில் மேலும் இரு ஊற்றுக்கள் உள்ளன.ஒன்று கருட தீர்த்தம்.மற்றொன்று அனுமந்த தீர்த்தம்.



அனுமன் சிறிய திருவடி என்றழைக்கப்படுபவர். கருடன் பெரிய திருவடி என்றழைக்கப்படுபவர்.
இருவருமே திருமாலின் வாகனங்களாகக் கருதப்படுவதுடன்.இருவருமே சாதாரணப் பிராணிகளாய் இருந்து சிரஞ்சீவிகளாய் ஆனவர்கள்.அப்படிப்பட்ட சிரஞ்சீவித் தன்மையை அளிக்கும் மூலிகைகளின்மேல் பட்டு வரும் தண்ணீரில் இருந்து வரும் தீர்த்தமே இது.

மேலும் ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். மலையில் அங்கங்கே சில சிறு விலங்குகளையும்,பல குரங்குக் கூட்டத்தையும் கண்டேன்.அவற்றின் சுதந்திரத் தன்மையையும் கண்டு மகிழ்ந்தேன்.அதே வேளையில் மனிதனின் சுயநலத்தாலும், அலட்சியத்தாலும், வேகமான வாகனங்களாலும் அவை அழிந்து வருவதையும் கண்டேன்.      

கண்ணெதிரே தேவஸ்தான வேன் ஒரு குரங்குக் குட்டியை அடித்துவிட அந்தத் தாய்க் குரங்கும்,அந்தக் குரங்குக் கூட்டமும் சேர்ந்து அழுததையும் பார்க்க மிக்க வேதனையும், வருத்தமுமாய் இருந்தது. 

எனவே தயவு செய்து அனைத்து மனிதர்களுக்கும் ஓர் வேண்டு கோள். சின்னஞ் சிறு உயிர்களையும் நம் உயிர் போல நினைத்து தயவு செய்து காப்பாற்றுங்கள். காக்க உங்களுக்கு நேரமில்லாவிட்டாலும் அழிக்காமல் இருக்க முயலுங்கள்.

இல்லாவிட்டால் நம்மை இயற்கை தண்டித்துவிடும். பிறகு நாம் சுனாமி வந்து தாக்குகிறது, பூகம்பம் வந்து தாக்குகிறது என்று வருந்தினாலும் பயந்தாலும் பயன் இல்லை.முடிந்த வரை மற்ற உயிர்களின் மேல் அன்பாக இருக்க முயலுங்கள். இல்லை இயற்கை நம்மை கொசு அடிப்பது போல அடித்துவிடும். இது வெறும் பயமுறுத்தல் இல்லை. உண்மை.

""தன்னுயிர் போல மன்னுயிர் எண்ண நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!!!!"" என்றும்
""வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்!!!"" என்றும் வள்ளலார் கூறியுள்ளதைக் கடைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள். இப்படி நாம் இயற்கையைக் காத்தால் இறையாகிய இயற்கை நம்மைக் காக்கும். 

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Friday, October 7, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்


சித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
                          -திரு வள்ளுவர்-
நோயணுகா விதிகள் என்றால் என்ன என்றும் அதை எப்படி வரவிடாமல் தடுப்பது என்றும் கீழே விவரமாகக் கொடுத்துள்ளேன்.பஞ்ச பூத சக்திகளை எப்படி நம் உடலில் தேவையான அளவிற்கு மட்டும் சேர்ப்பது என்ற ரகசியம் தெரிந்தால் நோயே இல்லை.


ஔவையிடம் முருகன் கொடியது என்ன என்று கேட்கிறார்.


அதற்கு ஔவைப்பிராட்டி கூறுகிறார்
கொடியது கேட்கின் நெடியவெவ்வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது!
அதனினுங் கொடிது இளமையில் வறுமை!
அதனினுங் கொடிது ஆற்றொணாக் கொடு நோய்!
அதனினுங் கொடிது அன்பிலாப் பெண்டிர்!
இன்புற அவர் கையி லுண்பது தானே!
என்பார் அவ்வளவு கொடியது நோய்.


மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலாவெண்ணிய மூன்று.
                           -திரு வள்ளுவர்-


வளி(காற்று),அக்னி(பித்தம்),சிலேற்பனம்(நீர்), கூடினாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் பண்ண வேண்டும் என்பார்கள் கிராமத்தில்.


மண்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் ஐந்துக்கு, இரண்டு மட்டுமே பழுதில்லாதது.மற்றவை மூன்றும் பழுதுள்ளது.மனிதன் மரணித்தால் ஆகாயம் உயிரோடு ஓடிப்போகும்.வாசியாக வாசித்துக் கொண்டிருக்கும் காற்று ஓடிப் போகும்.காற்றில்லாவிட்டால் நெருப்பும்(உடல் சூடு அணைந்து,உடல் சில்லிட்டுப் போகும்) ஓடிப் போகும்.


மண்ணும் நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.இந்த பிணத்துடன் மீந்திருக்கும் வாயு வீங்கல்(அல்லது வெடி வாயு) வாயுவான தனஞ்ஜெயன்.அது உடலுடன் தங்கியிருந்து உயிர் போன பத்தாவது நாழிகையிலிருந்து உடலை வீங்க வைத்து வெடிக்க வைத்து உடலை அழிக்கும்.


ஒரு ஜென் பௌத்தக் கதை:-
இரு சீடர்கள் பேசிக் கொண்டார்கள்.


முதலாமவன் சொன்னான் என் குருநாதரைப் போல உன் குருநாதரால் அற்புதங்களும் அதிசயங்களும் செய்ய முடியுமா,என்று கேட்டான் முதல் சீடன்.


இரண்டாம் சீடன் சொன்னான் என் குருநாதர் பசி எடுக்கும் போது சாப்பிடுகிறார்,தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்கின்றார்,தூக்கம் வரும்போது தூங்குகின்றார், என்றான்.


முதலாமவன் சொன்னான் இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்றான்.



இரண்டாமவன் சொன்னான் என் குருநாதர் பசி எடுக்கும் போது மட்டும்தான் சாப்பிடுவார்,சாப்பிடும் போது வேறு எந்த எண்ணத்தையும் எண்ண மாட்டார்.(EATING MEDITATION)


தாகம் எடுக்கும் போதுமட்டும்தான் தண்ணீர் குடிப்பார்.அப் போது வேறு எந்த எண்ணத்தையும் எண்ண மாட்டார்.(DRINKING MEDITATION)

தூக்கம் வரும்போது தூங்குவார்.{(அறிதுயில்) தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுதல்(MEDITATION ON SLEEP)}.

இதையே சித்தர்கள் ""மாடுதான் ஆனாலும் ஒரு போக்குண்டு மனிதனுக்கு அவ்வளவு தெரியாதப்பா???"" என்பார்கள். மாடு தண்ணீர் குடிக்கப் போனால் அதற்கு தண்ணீர் மட்டும்தான் தெரியும், மாட்டின் சொந்தக்காரன் நின்றால்கூட அது கவனிக்காது மிதித்துவிட்டு சென்றுவிடும். அதன் சிந்தனை நோக்கம் வேறாக இருக்காது. அது போல மனிதனுக்கு அவ்வளவு தெரியாமல்தான் துன்பத்திலும் துயரத்திலும் உழலுகின்றான்.   

உடலை வளர்த்த பஞ்ச பூதங்களும் உயிர் பிரிந்த பின் பஞ்ச பூத பெருஞ் சக்திகளுடனே சேர்ந்துவிடும்.இந்த பஞ்ச பூத சக்திகளை பிரியாமல் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ,அவ்வளவு காலம் உயிர் உடலில் நிலைத்திருக்கும். அவைகளில் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள் (நோய்கள்) உண்டாகா!!!!!!அந்த வழிகளையே கீழே விவரித்திருக்கிறேன்.     


1)உணவு(மண்):-
(அ):-
சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
(ஆ):-
பசி இல்லாத போது சாப்பிடக் கூடாது.
(இ):-
உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.
(ஈ):-
நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவைகளையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
(உ):-
சாப்பிடும் பொழுது கண்களை மூடி உதட்டை பிளக்காமல் (வாயை மூடியபடி மெல்ல வேண்டும்) மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும். 
(ஊ):-
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் மூன்று முறை உள்ளங் கையில் நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.  
(ஏ):-
குளித்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட பிறகு 2 1/2 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது. 
(ஐ):-
சாப்பிடும் முன் கை, கால், முகம் கண்டிப்பாக கழுவ வேண்டும். 
(ஒ):-
டி.வி பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(ஓ):-
பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.
(ஔ):-
கால்களைத் தொங்க வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(க):-
அம்மா தன் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது. 
():-
புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.
():-
முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.


2)குடி தண்ணீர்(நீர்):-

(அ):-
தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
(ஆ):-
தாகம் எடுத்த உடனே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
(இ):-
மினரல் வாட்டர் பயன் படுத்தக் கூடாது.
(ஈ):-
நீரை பில்டர் செய்யக் கூடாது.
(உ):-
நீரை மண் பானையில் குறைந்தது 2 மணி நேரம் வைத்திருந்து பின் பயன் படுத்த வேண்டும்.
(ஊ):-
தாகம் இல்லாமல் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சிறுநீர் கழித்தால் உடனே தண்ணீர் அருந்த வேண்டும்.
(ஏ):-
நீரை அண்ணாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.  


3)ஓய்வு தூக்கம் (ஆகாயம்):-
(அ):-
வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.
(ஆ):-
டீ, காபி குடிக்க கூடாது.
(இ):-
வெறும் தரையில் படுக்கக் கூடாது.
(ஈ):-
உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.
(உ):-
மனதுக்கும், புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்த பட்சம்  6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
(ஊ):-
தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
(எ):-
இரவில் பல்விளக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஏ):-
தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஐ):-
தலையில் உச்சிக்கும்,சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.


4)காற்று (வாயு):-
(அ):-
கொசுவர்த்தி,ஆல் அவுட்,குட் நைட் பயன்படுத்த கூடாது.
(ஆ):-
வீடு, அலுவகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும்,எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும் .
(இ):-
தூங்கும் போது ஜன்னல்களை அடைத்து வைத்து தூங்கக் கூடாது. 
(ஈ):-
கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.


5) உழைப்பு (நெருப்பு):-
(அ):-
பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
(ஆ):
A/C MACHINE ஐ 37'C ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(இ):
உழைப்புக்கேற்ற உணவு (அல்லது) உணவுக்கேற்ற உழைப்பு வேண்டும்.
(ஈ):-
தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புக்களுக்கும் வேலை தர வேண்டும்.
(உ):-
இரத்தம் ஓட இதயம் உதவும்.ஆனால் நிணநீர் ஓட்டம் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். 
(ஊ):-
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் நிணநீர் ஓட்டம் இருக்காது.இதுதான் பல நோய்களுக்கு காரணம் .


ஐந்து திபேத்திய யோக அசைவுகளைச் செய்யுங்கள்.அவை உடலில் பல வித்தியாசங்களை உண்டாக்கும்.நோயிலிருந்து விடுவிக்கும்.எந்தக் காரியமானாலும் இருபத்தியோரு முறை இறை சன்னதியை நமது முன்னோர்கள் சுற்றச் சொல்வார்கள், அதயேதான் திபேத்திய யோக முறைகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்.

இவற்றையேதான் திரு ஹீலர் பாஸ்கர் வலியுறுத்திக் கூறுகிறார்.அந்த விடயங்களைக் கேளுங்கள். நோயின்றி வாழுங்கள்.






ஹீலர் பாஸ்கர் அவர்களின் இந்த இணைப்பைப் பார்வையிடுங்கள். 
http://anatomictherapy.ning.com/events/the-art-of-self-healing-1
அவர் வெளியிட்டுள்ள அந்த ஐந்து DVD க்களை வாங்கி,போட்டுப் பார்த்து கேட்டு, அவைகளக் கடைப் பிடித்தால் உங்கள் வீட்டில் ஆரோக்கியம் பொங்கும்.நோய் போகும். 


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Monday, October 3, 2011

எனது கருத்தொத்தவர்கள் பாகம்(2)

எனது சீடர்களில் ஒருவர்:-
அன்புள்ள பதிவு வாசகர்களே,
இந்தப் பதிவில் என்னிடம் மருத்துவம் கற்க வந்த சீடர்களில் எனது தலையாய சீடர் திரு தமிழவேள் என்பவரைப் பற்றி கூற இருக்கிறேன்.


அவரது வலைப்பூ இணைப்பு இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு முறை பார்த்துவிட்டு கட்டுரையை தொடருங்கள்.

http://siddhahealer.blogspot.com/2011/09/blog-post_23.html


திரு தமிழவேள் அவர்களின் அலைபேசி எண்கள்
93458 12080, 94447 76208
அவரின் முகவரி 
ந.தமிழவேள்,
மரபு வழி நலவாழ்வு மையம்,
எண் 31,அண்ணா தெரு,காந்தி நகர்,
ஆவடி,சென்னை-600 054


திரு தமிழவேள் என்னிடம் முதல் முதலாய் வைத்தியம் கற்க வேண்டும் என்றபோது , அகத்தியரின் மஹா திராவக பாடலின்படி உங்களுக்கு வைத்தியம் கற்க தகுதி இல்லை என்று கூறுகிறதே என்ன செய்ய என்று கேட்டேன். அவரை மீண்டும் வேறோர் நாள் பார்ப்போம் என்று திருப்பி அனுப்பிவிட்டேன்.


பின்னர் அவர் எங்கள் பாண்டியூர் சபை உபதேசம் பெற்று உறுப்பினரும் ஆனார்.உபதேசம் பெற்றால் தேவர்கள் ஆவர்.பாண்டியூர் சபை தேவ சபை.மச்ச முனிவரின் சித்த ஞான சபை உறுப்பினர் ஆவது அவ்வளவு எளிதல்ல.எனவே எனது பார்வை மாறியது.ஆனாலும் அவர் கேட்ட அனைத்து கோரிக்கைகளும் மறுக்கப்பட்டது(சித்த ஞானிகளால் கட்டளை எனக்கு இடப்படாததால்). 


ஆனால் அவர் என்னை விடவில்லை,முயற்சி திருவினை ஆக்கும் என்ற வாக்கிக்கிணங்க,குரு பார்த்த சாரதி அவர்கள், அவருக்கு கற்றுக் கொடுக்க ஆணையிட்டார்.தமிழவேளின் முயற்சி சித்தர்கள் ஞான சபையை தளர்த்தியது.எங்களது சித்த ஞான சபை அவரை ஏற்றது. அதாவது தவிர்க்கப்பட்டவர் எனது தலை சிறந்த சீடரானார். (திருவிளையாடல் படத்தில் வருமே,விறகு விற்பவர் பாணபத்திரரின் ஒதுக்கப்பட்ட சீடர் என்று கூறிக் கொண்டு, ஹேம நாத பாகவதரை தோற்கடித்தது போல், இறையருள் தமிழவேளுக்கு பல சக்திகளை கூட்டுவித்தது )


அவர் பற்பல சித்த வைத்திய மருத்துவ பிரயோகங்களையும் கற்றார்.பல ஞானியர்களின் தொடர்பு கிட்டியது.அவர் ஆங்கில வைத்தியத்தை எதிர் முறையம் என்று பெயரிட்டார். பல சித்தர் விடயங்களில் தேர்ந்தார். எனது பிரியத்துக்குரிய சீடராகவும் ஆனார்.


பல சித்த மருந்துகளை செய்து பார்த்தார்.கடைசியில் ஒன்று கேட்டார்.ஏன் ஐயா(என்னை அப்படித்தான் அழைப்பார்) இத்தனை சித்த மருந்துகள் இருந்தும் ஏன் நோயாளியை முழுதாக குணப்படுத்த முடியவில்லை என்று கேட்டார்.


உங்களுக்கு மருந்து வேண்டுமா நோயாளியின் குணம் வேண்டுமா??? என்று கேட்டேன். நோயாளர் குணம்தான் வேண்டும் என்றார். அதற்கேற்றாற் போல பல விடயங்களை விளக்கினேன். அதன் அடிப்படையில் அவர் இறை வழி மருத்துவம் என்ற ஒரு வழியை அவரது போக்கில் உண்டாக்கிக் கொண்டார்.


அவருக்கு தற்போது சித்த மருத்துவம், இறை வழி மருத்துவம், வர்மம், டாய் சீ, அக்கு பஞ்சர்(மெடிசினா ஆல்டெர்னேட்டிவா),அக்கு தொடு கலை,மற்றும் சீனத் தற்காப்புக் கலைகளிலும் விற்பன்னர்.


சித்தர் மரபு வழி மருத்துவம் என்ற பெயரில்,அவரது முறையில், வழியில் பல நோய்களுக்கு அற்புதமான சிகிச்சைகள் புரிந்து வருகிறார்.


மற்றொரு நபரை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். திருமதி ரத்னா வேல்முருகன் அவர்கள் திரு தமிழவேள் மூலம் அறிமுகமானவர்கள். அவர்கள் அக்கு பஞ்சர் கலையை பதஞ்சலி யோகா மையம் மூலம் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். நிறைய அன்பர்கள் அக்கு பஞ்சர் கற்க விரும்பி எனது மின்னஞ்சல் முகவரிக்கு முகவரி கேட்டு நிறைய மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்கள்.அவர்களுக்கு பதில் அனுப்பும் முகமாகவே இந்தப் பதிவு.அவர்கள் திருமதி ரத்னா வேல்முருகன் அவர்களின் யோகா மைய முகவரியை அணுகலாம்.அவர்கள் யோகா மைய முகவரி இதோ கீழே


பதஞ்சலி யோக மையம்,
3/7, செந்தமிழ் நகர்,
வேளச்சேரி முக்கிய சாலை, 
மேடவாக்கம்.
சென்னை-100


அக்கு பஞ்சரில் ஒரு தத்துவம் கூறுவார்கள் ""THERE  IS NO MEDICINE IN THE NEEDLE.THERE IS A TECHNIC TO CONNECT THE UNIVERSE AND THE PATIENTS BODY.  THE POWER OF THE NEEDLE HOLDERS HAND SHOULD BE MOST POWERFUL TO CONNECT THE UNIVERSAL FORCE. SO THE MAN BEHIND THE NEEDLE SHOULD BE MOST POWERFUL."


இந்த வாக்கியங்களுக்கு தகுந்த மருத்துவர்களே மேற் சொன்ன இருவரும்.பதஞ்சலி யோக மையம் நடத்தும்  பயிற்சி வகுப்புக்கள் மத்திய அரசின் ஒப்புதலோடு நடத்தப்படுகின்றன என்பது கூடுதல் சிறப்பு.    


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment