மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, November 16, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(6)

கருப்பட்டியின் நன்மைகளும் சீனியின் கெடுதல்களும்
நான் 2001ம் ஆண்டு ராஜ் T.V.யில் ஒளிபரப்ப தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி 2001வருடம், நான் பல விடயங்களைத் தயார் செய்து கொண்டு போனேன்.அதில் கடைசியாக நானே ஒளி பரப்ப ஏற்றவை என்று, முடிவான முடிவுக்கு குறிப்பிட்ட ஏழு விடயங்களை தயார் செய்து கொண்டு போனேன்.

அந்த ஏழு விடயங்களில் இரண்டை மட்டும் ஒளி பரப்பினார்கள்.அதில் ஒன்று (1)என் நாடித்துடிப்பை நிறுத்திக் காண்பித்தது.மற்றொன்று(2)மூலிகைகளின் உதவியால் கண்ணாடியை வாயில் போட்டு மென்று காண்பித்தது.ஒளி பரப்பப்பட்ட அந்த இரு விடயங்களை பின்னொரு சமயம் ஒளிக்காட்சியுடன் வலைப் பூவில் இடுகையாக இடுகிறேன்.இப்போது அந்த ஏழுள் ஒளிபரப்பப்படாத ஒரு  விடயம் பற்றி என் வலைப்பூ அன்பர்களுக்கு சொல்ல விழைகிறேன்.

 கந்தகப் பொடியை சாம்பிராணிக் கரண்டியில் தீக் கங்குகளை வைத்து புகை போட்டு அந்தப் புகையில் ரோஸ் நிறம் உள்ள ,ஒரு ரோஜாப் பூவைக் காண்பித்தால்,ரோஜாப்பூ  கந்தகத்தின் விஷத்தன்மையால் வெள்ளையாக மாறிவிடும்.

பனைவெல்லத்தை (பனங் கருப்பட்டியை) இதே போல் புகை போட்டு, மீண்டும் அந்த வெள்ளையான ரோஜாவை கருப்பட்டியை நெருப்புக் கங்கில் இட்டதால் வரும் புகையில் காட்ட,கந்தகத்தால் ஏற்படுத்தப்பட்ட நஞ்சின் காரணமாக, நீங்கிய தன் பழைய நிறமான ரோஸ் நிறத்தை மீண்டும்  ரோஜா அடைகிறது. கருப்பட்டிப் புகை கந்தகத்தால் ஏற்படுத்தப்பட்ட நச்சை நீக்குவதால் ரோஜா தன் நிறத்தை அடைகிறது.

மேற்கண்டதை,மந்திரவாதம்(HERBAL MAJIC) போல் இதை நீங்களும் செய்து பார்க்கலாம்.மற்றவர்களுக்கும் வேடிக்கை காட்டலாம். இது போலவே மூலிகைகளை வைத்துச் செய்யும் வித்தைகளை கண்கட்டு வித்தை இரண்டாயிரம் என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


எனது நண்பரின் தாய் இறந்து போனபோது எரியூட்டும் நிகழ்வுக்கு,போய் இருந்தேன்.வானம் மப்பும் மந்தாரமும் ஆக இருந்தது.மழை சற்று சிறு தூற்றலாய் வேறு விழுந்து கொண்டிருந்தது. 

சுடு காட்டில் பிணம் எரிக்க மட்டும் சிறு கூரை மட்டுமே இருந்தது.வேறு ஒதுங்கக் கூட இடம் கிடையாது.அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிணத்தை எரிக்க பிண மேடையில் வைத்து மண்ணெண்ணெய் போன்றவற்றை துணிகளில் நனைத்து பிணம் நன்றாக எரிய, எல்லாப் பக்கமும் வைத்து பற்ற வைத்தார்கள்.

அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. மழை பெய்ய ஆரம்பித்தவுடன், பிணம் எரிக்க வைத்த நெருப்பு தணிய ஆரம்பித்து அணையும் நிலைக்குப் போனபோது,வெட்டியான் சீனியை எடுங்க,சீனியை (வெள்ளைச் சர்க்கரை என்றும் சென்னையில் அஸ்கா சர்க்கரை என்றும் அழைக்கப்படுவது)எடுங்க என்று அவசரப்படுத்தினான். உடனே சீனியை எடுத்து அந்தப் பிணம் எரியும் நெருப்பில் தூவியதும்,அந்தப் பெரு மழையிலும் நெருப்பு சட சட வென தாவி எரிய ஆரம்பித்தது.

சாதாரணமாக எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் எரியும் பிணம் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் சுத்தமாக வெந்து சாம்பலாகிவிட்டது.அதே சமயம் கொஞ்சம் கருப்பட்டியை எந்த நெருப்பில் இட்டாலும் அது நெருப்பை அணைக்கும் செய்கையைத்தான் செய்யும்.புரிகிறதா!

இது போலவே சீனி நம் உடலில் உள்ள வெப்பத்தை கடுமையாக கிளர்ந்து எழ வைத்து,உயிரோடு பொசுக்கும் வேலையை திறம்பட செய்து சாப்பிட்டவரை ஒரு வழி செய்துவிடும்.பிறகு அவர் உயிரோடு எரிவது போலத்தான்.

ஆனால் கருப்பட்டியை(பனை வெல்லம் என்னும் கருப்புத்தங்கம்) உணவில் எப்படி சேர்த்தாலும்,நம் உடம்பில் சேர்ந்த நஞ்சை நீக்கி,உஷ்ணத்தை தணித்து உடலை உரம் பெறச் செய்யும்.

வெள்ளையாய் இருந்து உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நஞ்சு வேண்டுமா! அல்லது கருப்பாய் இருந்து உடலை வளப்படுத்தும் கருப்பட்டி வேண்டுமா! நமது வலைப்பூ வாசக அன்பர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

நான் சீனியைவிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.அப்ப நீங்க!

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

17 comments:

  1. அன்பரே ., !!!
    பட்டய கிளப்பிட்டிங்க!! , தங்களின் இந்த பதிவால் , கருப்பட்டி அமிர்தமாக இனிக்கிறது நாக்கில் .,
    மேலும் ,தங்களின் ஒவ்வொரு பதிவும் வியப்பாகவும் ., மலைப்பாகவும் இருக்கிறது ., தங்களின் வலைப்பூவை பார்க்கும் ., வாய்ப்பை அளித்த சித்தருக்கு நன்றியும் ., தங்களின் பதிவிற்கு கருத்துரை எழுதுவதை பாக்கியமாக நினைத்து பெருமையடைகிறேன் .,

    இப்படிக்கு ,
    புலிப்பாணிச் சித்தர் அடிமை .
    சித்தர் பைத்தியம்

    ReplyDelete
  2. மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே.நம் நாட்டுக் கருப்பட்டிக்கு இருக்கும் தனித்தன்மைகளை சொல்ல ஒரு பதிவு போதாது.அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது இந்தக் கருப்பட்டி.இது பனையில் இருந்து கிடைக்கும் பனம் பாலெனப்படும் பதநீரைக் காய்ச்சி எடுக்கப்படுகிறது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. வியக்கவைத்த தகவல்கள்...

    இன்னும் இதுபோல நிறைய அறிந்துகொள்ள ஆவல்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. மிக்க நன்றி திரு சுந்தரா அவர்களே,
    தங்களின் ஆவலுக்கு என் வலைப் பூவில் உங்கள் ஆவலுக்கு தீனி உண்டு.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. பதநீரைக் காய்ச்சும் போது,பக்குவப் படாத கூழாக நிறையச் சாப்பிட்டுள்ளேன்.அதன் மணம்,அதன் சுவை இன்றும் மனதைவிட்டு நீங்காமல் உள்ளது.

    அதற்காக cane sugar எனப்படும் சீனி நம் உடலைப் பாதிக்கும் என்பது தவறு.

    கறும்புச்சாறு நமக்கு எந்தக் கெடுதலும் செய்வதில்லை.எதையும் அளவாகப் பயன்படுத்தினால் நன்மையே.

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ராவணன் ஐயா அவர்களே,ஒவ்வொரு பதிவும் உண்மையில் மிகுந்த ஆராய்ச்சியின் பிறகுதான்,எழுதப்படுகிறது.கரும்புச் சாறு நமக்கு எந்தக் கெடுதலும் செய்வது இல்லை.சீனி வேறு.அதில் 16 லிருந்து 36 வகையான விஷச் சத்துக்கள் சேர்க்கப்பட்டு அது வெறும் கரியாகவே மாற்றப்படுகிறது.கீழ்க் காணும் வலைப் பூக்களை காணுங்கள்.
    http://tamil.darkbb.com/-f23/--t1143.html
    http://mytiruvarur.com/?at=TmV3cw==&ap=bmV3enB1Yi5waHA=&q=MTIzNA==
    http://www.alaikal.com/news/index.php?s=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF
    http://tamilmarutham.blogspot.com/2010/01/blog-post_08.html
    http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14346
    http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10350
    http://azhkadalkalangiyam.blogspot.com/2010/11/blog-post_6645.html
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. எங்கும் காண கிடைக்காத பதிவு
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

    உங்கள் அன்பன் அனாதி

    ReplyDelete
  8. தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
  9. கருத்துரைக்கு மிக்க நன்றி திருஅனாதி அவர்களே,இறைவனுக்கே நன்றி.இது போன்ற விஷயங்களை அறிய சந்தர்ப்பம் ஏற்படுத்திய இறைவனுக்கு என் நன்றி.அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திரு நடம் இறை நடனம்.அறிந்ததை அறிவிப்பதே என் கடமை என்னும் கடன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  10. நன்றி திரு மணி ஐயா அவர்களே,
    தங்கள் பாராட்டு இறைவனுக்கே போய்ச் சேர வேண்டும்.ஏனென்றால் இறை எனக்களித்த சந்தர்ப்பம் இவைகளை தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. ரொம்ப நன்றிங்க.....உங்கள் தளத்தை எனக்கு அறிமுக படுத்தியதுக்கு....கருபட்டியை பற்றி மிக நன்றாக தெரிந்து கொண்டேன். சர்க்கரையின் தீமையையும் புரிந்து கொண்டேன்..... நல்ல தகவல்கள் கொடுக்கிறீங்க...பலருக்கும் பயன் படும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. இன்னும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்க தளத்தை தொடருகிறேன்....நன்றி

    ReplyDelete
  13. ஆச்சரியமான தகவல்கள்.
    கருப்பட்டி கிடைக்காத ஊரில் இருக்கேன். வெல்லம் பயன்படுத்தலாமா?

    ReplyDelete
  14. மிக்க நன்றி திரு துளசி கோபால் அவர்களே,
    கருப்பட்டி கிடைக்காத இடத்தில் வெல்லம்,நாட்டுச் சர்க்கரை உபயோகிக்கலாம்.ஆனால் அவையெல்லாம் இரண்டாம் பட்சமே.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  15. மிக்க நன்றி திரு கௌசல்யா அவர்களே,
    என் வலைப் பூவின் கருத்தை உங்கள் வலைப் பூவிலும் வெளியிட்டு உள்ளதையும் பார்த்தேன்.தங்கள் மனதை எனது தகவல் நன்கு தொட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  16. நல்ல தகவல். கருப்பட்டி உடலுக்கு குளுமை என்பதை உங்கள் பதிவின் மூலமே தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  17. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தூத்தன் அவர்களே,
    கருப்பட்டி கருப்புத் தங்கம்.அதன் அருமை புரியாமல் சீனி வெள்ளையாய் இருப்பதால் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறோம்.இந்த வெள்ளை மோகம் போனால்தான் நாம் உருப்பட முடியும்.வெள்ளையாக இருக்கும் சோறு,சீனி,உப்பு,பால்,போன்றவற்றை சேர்க்காமல் இருந்தால் உடல் நலமாய் இருக்கும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்