மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, October 19, 2010

காப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள் தொடர்ச்சி...

இந்த பதிவுகள் எல்லாம் எனக்குள் தோன்றிய கேள்விகளின் பதில்களே.வாத வைத்தியத்திற்கும்,வாதம் வகை 80 ற்கும் (கை கால் மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கும்,பக்க வாதத்திற்கும்,கை கால் செயல்படாமல் இருக்கும் நிலைகளுக்கும்) சித்த வைத்தியர்கள்,சிறுநீர் பெருக்கிகளையும் (DIURETICS), பெருமலம் போக்கிகளையும் (PURGATIVES) ஏன் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.

அப்படி இருந்த போது அக்கு பஞ்சரில் இதற்கான கேள்விகளையும் அதற்கான விடையையும் கொடுத்தார்கள் எனது அக்கு பஞ்சர் குருநாதர்கள் ஆன நெல்லிக்குப்பம் திருDr M.N.சங்கர் , சேலம் ஷண்முகா மருத்துவமனையில் பணிபுரியும் திரு Dr ஜோசப்பால் , திரு Drஆன்டன்ஜெயசூர்யா(LATE) (CHAIRMAN MEDICINA ALTERNATIVA), ஆகியோர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.அவர்களுக்கு இந்த இடுகையை சமர்ப்பணமாக்குகிறேன்.

அக்கு பஞ்சரில் என்னை முனைவர் பட்டம் பெறச் செய்ததோடு மட்டுமில்லாமல் எனக்கு எல்லா அக்கு பஞ்சரின் அதி நுட்பங்களைக் கற்பித்தவர்கள் இவர்களே!அக்கு பஞ்சரில் என் கட்டுரையில் வித்துவத்துவம் ஏதேனும் தென்பட்டதென்றால் இவர்களே காரணம்.


காப்பி, டீயால் பித்தம் அதிகரிப்பது மட்டுமல்ல,காப்பியிலும்டீயிலும் காஃபீன் என்ற நஞ்சு உள்ளதுகுடித்த எட்டு மணி நேரத்திற்கு மேல் இது ரத்தத்தில் இருந்து தன் கெடுதல் பணியை தொடர்ந்து நடத்துகிறது.

காப்பிக் கரைகள் நமது ஆடைகளில் பட்டாலே பல முறை துவைத்தாலும் போவதில்லை.அவ்வளவு தூரம் கரையை ஏற்படுத்தும் இவற்றை பல ஆண்டுகளாக குடித்து வரும் நம் குடல்களில் எவ்வளவு கறை படியும். யோசித்துப் பாருங்கள்.

சென்ற பதிவின் இடுகையின் திரு தோட்டக்காரன் அவர்களின் பதிலில் குறிப்பிட்டுள்ள விஷயத்தை இங்கே மிக விரிவாகத் தருகிறேன்.டீயில் கிரீன் டீ என்ற ஒன்று உண்டு.அது டீயின் கொழுந்து இலைகளை அப்படியே பறித்து நொதிப்பிற்கு உட்படுத்தாமல்,மிதமாக சூடாக்கப்பட்டு நொதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு நிழலில் உலர்த்தி தயாரிக்கப்படுகிறது. இதனால் அதில் உள்ள 'பாலி பீனால்கள்சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது.இவை கேன்சரையே தடுக்கும், குணப்படுத்தும் வல்லமை உள்ளவை.

சைனாவில் தங்கள் குருமார்களுக்கு சீடர்கள் கொடுக்கும் குரு தட்சிணையே,இந்த டீதான்இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இலைத்தேயிலையில் தயாரிக்கப்பட்டு எலுமிச்சம்பழச்சாறு சேர்க்கப்பட்டு இனிப்பு கலக்காமல் பரிமாறப்படுகிறது,என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த டீ மல்லிகை மணத்துடன் இருக்கும்.இந்த டீ கேன்சரைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்(ANTI OXIDENTS) களை உள்ளடக்கியது.

நமக்கு டீ என்ற பெயரில் டீ இலைத் தூசிகள்தான்(DUST TEA)வழங்கப்படுகிறது, தனியாக செயற்கை மணம்,திடம்,நிறம் ஊட்டப்பட்டு வருகின்றன.இதில் போலிகள் வேறு.பல டீக்கடைகளில் பழைய டீத்தூளை வாங்கிச் சென்று மீண்டும் மேற்கண்ட மூன்றும் ஊட்டப்பட்டு புத்துணர்வுடன் திரும்பி வருகின்றன, நமக்கு புத்துணர்வூட்ட!குப்பையில் போட வேண்டியதை எல்லாம் வேளை தவறாமல் குடித்து வருகிறோம்.

மேலும் நம் உடலில் உள்ள அனைத்து எலும்புகளும் சுண்ணாம்பை (CALCIUM)அடிப்படையாக கொண்டது.இதுதான் நம் உடலைத் தூக்கி நிறுத்துகிறது. இந்த எலும்புச் சட்டகத்தை அரிப்புக்கு உள்ளாகாமல் காக்கவே நம்து இரத்தம் காரத்தன்மையோடு(BASE NATURE)உள்ளதாக இறைவனால் வைக்கப்பட்டுள்ளது.அதன் காரத்தன்மை மாறி அமிலத்தன்மைக்கு(ACID NATURE)மாறினால் எலும்புகள்ஆங்காங்கே அரிக்கப்படும்,குறிப்பாக மூட்டுகளில் இந்த சேதம் அதிகம் இருக்கும்.

இதில் உடலின் இரத்தத்தை காரத்தன்மையில் இருந்து அமிலத் தன்மைக்கு மாற்றும் முக்கிய மூன்று காரணிகளைப் பார்ப்போம்.

(A) குளிர் பானங்கள்
(B) நன்றாக மென்று உமிழ் நீரோடு கலந்து தின்னாமல் அப்படியே விழுங்குவது 
(C) வேகங்கள் ஐந்தனுள் ஒன்றான சிறுநீரை அடக்குவதால் ஏற்படுவது
இந்தக் காரணிகள் எப்படி இந்தப் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. அவற்றை விளைவுகளை எப்படி மாற்றுவது,அல்லது தடுப்பது என்று பார்ப்போம் 

(A)முதலில் குளிர் பானங்களுக்கு வருவோம்.இவை பொதுவாகவே கரிய மில வாயுவை பானங்களில் கரைத்தே குளிர் பானங்கள் உருவாக்கப்படுகின்றன. கரியமில வாயு(CARBAN DI OXIDE )தண்ணீரில் கரைந்தால் அமிலமாகவே மாறுகிறது (CARBOLIC ACID).  இவைகளை அருந்துவதால் நம் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பால் வயிற்றின் இரைப்பை,குடல் இவற்றில் புண் உண்டாகி,அதன் பின் இரத்தத்தில் அமிலத் தன்மை உயர்கிறது.

(B)மேலும் நாம் உண்ணும்போது சீரணம் நம் கைகளில் ஆரம்பித்து வாயில் நடைபெற்று வயிற்றில் முடிவடைகிறது என்பார்கள்.

இதையே நம் ஆன்றோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு என்பார்கள்.

வாயில் காரத்தன்மை என்ற {சுண்ணாம்புச் சத்தை (CALCIUM)} அடிப்படையாகக் கொண்ட வாணி என்றழைக்கப்படும் எச்சில் என்ற உமிழ்நீர் உள்ளது.

நாம் உண்ணும் உணவினை நன்றாக மென்று அரைத்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டால்,அது வயிற்றில் போய் உணவு வயிற்றில் இரைப்பையில் உள்ள அமிலங்களால்(HYDRO CHLORIC ACID) கரைக்கப்பட்டு சீரணம் ஆன பின் உமிழ்நீரில் உள்ள காரத்தன்மை{சுண்ணாம்புச் சத்தை( CALCIUM) அடிப்படையாகக்
கொண்டது அமிலத்துடன் வினைபுரிந்து அதை சமநிலைப்படுத்துகிறது.

இப்படி இல்லாமல் அப்படியே உணவை விழுங்கும்போது உணவுடன் உமிழ்நீருடன் கலக்காததால் வயிற்றில் இரைப்பையில் உணவு சீரணமான பின்,சீரணத்துக்குப் பின் எஞ்சி இருக்கும் அமிலம் உமிழ் நீர் அதை நிலைப் படுத்த இல்லாததால் குடலின் சுவர்களை அரிப்பதோடுநெஞ்செரிச்சல் (HEART BURNING) போன்றவைகளை உண்டாக்கிஇரத்தத்தின் அமிலத்தன்மையையும் உயர வைக்கின்றன.

(C)மூன்றாவதாக இங்கு நான் குறிப்பிடுவது நம் உடலில் வேகங்கள் ஐந்து. இவை 96 உடற் தத்துவங்களில் அடங்கும்.அவை வேகமாக வெளியேற முயற்சிக்கும்போது அடக்குவதனால் வரும் விளைவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1)இருமல்
2)தும்மல்
3)விந்து வெளியேறுதல்,நாதம் வெளியேறுதல்
4)மூத்திரம் வெளியேறுதல்
5)மலம் வெளியேறுதல்

இதில் நான்காவது வேகமான மூத்திரத்தை அடக்குவதால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.வேகமாக வெளியேற முயற்சிக்கும் மூத்திரத்தை அடக்குவதால்,சிறுநீரகம் தனது கழிவுகளை வெளியேற்றும் பணியின் மூலம் வெளியேற்றி தேக்க இடம் இன்றி சிறு நீர்ப்பை நிறைந்து இருப்பதால்அது தன் வேலையான கழிவு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.உடனே நமது உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்றவற்றின் அளவு உயர்கிறது.

நமது சிறுநீரகம் நம் இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையை குறிப்பாக யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்ற உடலுக்கு தீங்குபயப்பவற்றை  நீக்கிகாரத்தன்மையை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.இதைப் பற்றி ஏற்கெனவே முன்னொரு பதிவில் விளக்கமாக எழுதிவிட்டேன்.

யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்றவற்றின் அளவு உயர்வதன் விளைவாகஇந்த அமிலங்கள் மூட்டுகளில் உள்ள இரத்த நாளங்கள் நெளிந்து வளைந்து செல்லுவதால் அங்கேயே படிந்துவிடுகின்றன. பின்பு அந்த மூட்டுக்களை அரிக்க ஆரம்பிக்கின்றன.இதனால் மூட்டுக்கள் தேய்ந்துவிடுகின்றன. அதனால் மூட்டுக்களில் வலி ஏற்படுகின்றது.

எனவேதான் ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கக் கூடாது என்ற வழக்குச் சொல் வந்தது.

மூட்டுகள் என்பவை தேய்ந்து போக கதவின் கீல்கள் அல்ல.அவற்றைத் தேய்மானம் செய்யும் காரணிகளை நீக்கினாலே,உடல் தன்னைச் சரி செய்து கொள்ளும் தன்மை வாய்ந்தது,மூட்டுத் தேய்மானம் என்பதே இல்லாமல் போய்விடும்.மேலும் தக்காளியில் அதிக யூரிக் அமிலம் (URIC ACID&ETC) இருப்பதாலேயேமூட்டு வலி உள்ளவர்கள் அதை சாப்பிடுவதிலிருந்து தவிர்க்கும்படி வைத்தியர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையே ஆங்கில வைத்தியத்தில் மூட்டுத் தேய்மானம் என்று கூறி மூட்டுகளில் போய் வைத்தியம் பார்ப்பதும்.வோவிரான் ஜெல்,மற்றும் வோவிரான் ஊசி மருந்துகள் பொடுவதால்,சிறுநீரகத்தின் பழைய பாக்கியிருக்கும் வேலையோடு புதியதாக இந்த மருந்தின் தொல்லையைச் சமாளிக்கும்அதிக வேலைப் பளுவின் காரணமாக சிறுநீரகம் பழுதடைகிறது.நோய் மேலும்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது.

வைத்தியன் காரணம் புரிந்து வைத்தியம் செய்தாலே குணம் கிடைப்பது தாமதம் ஆகும்.காரணமே புரியாமல் வைத்தியம் பார்த்தால் என்ன ஆகும்.
காரணமே புரியாமல் வைத்தியம் புரிவதையே ஆங்கில வைத்தியம் செய்கிறது.
சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல இடம் அதிகம் எடுத்தால் படிப்பவர்க்கு சலிப்பு தட்டும் எனவே,இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்

Post Comment

18 comments:

  1. அய்யா ,
    100% சரியாக சொன்னிக !!! ., விழிப்பூணர்ச்சி உட்டும் ., இந்த பதிவுவை அளித்ததற்கு நன்றிகள் பல
    .இப்படிக்கு ,
    சித்தர் பைத்தியம்

    ReplyDelete
  2. அண்ணாச்சி சித்தர் பைத்தியம் இப்போதுதான் முழுமையான பதிப்பு வெளியிட்டிருக்கேன்.பார்த்து உங்கள் வேகத்துக்கு ஏத்த மாதிரி பதில் கொடுங்க.உங்கள் பதிலளிப்பிற்குமிக்க நன்றி.
    என்றென்றும் பேரன்பினால்
    அன்பன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. திரு. சாமீ அழகப்பன் அவர்களுக்கு தங்களது பதிவு மிக உபயோகமாக இருக்கிறது தொடர்ந்து மேலும் சித்த வைத்தியம் தொடர்பாக பல விஷயங்களை எழுத தங்கள் குரு நாதர் மச்சமுனி உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
    நன்றி
    சு.மணிகண்டன்
    நெய்வேலி.

    ReplyDelete
  4. திருமிகு மணி அவர்களே, மேன்மைமிகு சித்தர் மச்ச முனி அவர்களின் அருட் கடாட்சத்தால்தான் இந்த வலைப் பூ ஆரம்பிக்கப்பட்டது.எனக்கு வலைப் பூவை முதலில் அறிமுகப்படுத்திய அன்பரும்,எனது அருமை நண்பரும் ஆன ஆன்மீகக் கடல் அன்பர் திரு கை.வீரமுனி அவர்களின் மேற்பார்வையில் எனது முதல் இடுகை இதே வலைப்பூவில் வெளியிடப்பட்டது. எனது நண்பரின் வலைப்பூ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
    http://aanmigakkadal.blogspot.com/
    http://scientifichinduisum.blogspot.com/
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    அன்பன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. வினொதினி,ஜாய் மாணிக்கா என் வாசக அன்பர்களாகிய ஆண்,பெண் என்ற பேதமில்லாமல் உங்கள் அனைவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய டானிக்!என்னை உசுப்பிவிட்டுவிட்டு உங்களை என் வலைப் பூ பக்கமே காணோம்.வருகிறீர்களா!கொஞ்சம் பேசிவிட்டு போங்கள்
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    அன்பன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. பதிவானது தெளிவான தகவல்களுடன், மருத்துவக் கட்டுரை ஒன்றின் நேர்த்தியுடன் மிளிர்கிறது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. திரு டுபாக்கூர் பதிவர் ஐயா அவ்ர்களே,
    இந்தப் பெருமை என்னைஉருவாக்கிய குருமார்களையும்,குறிப்பாக என் ஆன்மீகத்துக்கும்,வைத்தியத்துக்கும் குருவான திருமிகு சர.கோ.பார்த்தசாரதி ஐயா அவர்களையும்,மூலிகை மணி கண்ணப்பரின் நூல்களை எனக்கு கொடுத்து என் மூலிகை ஆர்வத்தை தூண்டிய என் சித்தப்பா திருமிகு மா.இராமையா அவ்ர்களையும், என் தந்தையார் முனைவர் உயர்திரு வீ.சேதுராமலிங்கம்,அவர்களையே சேரும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    அன்பன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  8. ஐயா
    தங்களின் கட்டுரைக்கு நன்றி.
    நான் ஆஸ்திரேலியாவில் கான்பெரா நகரில் வசிக்கிறேன்.குளிர் காலத்தில் டீ, காபி குடிக்கலாமா? கிரீன் டீ தவிர வேறு என்ன குடிக்கலாம்? ரெட் வைன் குடிப்பது மிக நல்லது
    என்கிறார்களே , அது உண்மையா?
    கிழக்கின் கருத்துகளுக்கும் மேற்கின் பார்வைகளுக்கும் நடுவே
    முரண்பட்டு குழம்பிப் போகிறேன்.தங்களின் மேலான அறிவுரையை எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    ஜெய்மணிகா

    ReplyDelete
  9. அன்புள்ள திரு ஜெய் மணிகா அவர்களே,
    கீரீன் டீ எப்போதும் சாப்பிட மிக நல்லது.அது போக இந்த பாலி பீனால்களும்,ஆன்டி ஆக்ஸிடென்ட்களும், அதிகம் உள்ள ஒரு பானம்தான் ரெட் வைன்.எனவேதான் கிறித்துவர்கள் இதை ஏசுவின் இரத்தம்,என்பார்கள்.இதை வீட்டிலேயே நாமே தயாரித்து அருந்தலாம்.சிவப்பு திராட்சை அல்லது பன்னீர் திராட்சையை நன்கு தண்ணீரில் கழுவிவிட்டு(பூச்சி மருந்துகளை அற்றதாக கழுவிவிடவும்) ஆர்கானிக் முறையில் இயற்கை உரம்,இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்டதாக இருந்தால்,மிக்க நலம்,கையை நன்றாக கழுவிய பின் திராட்சையை தோலுடன்,கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு பிசைந்து அதனுடன் பவுடர் ஈஸ்ட் எனும் பேக்கிங் ஈஸ்டை வாங்கி வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து,குழம்பாக பிசைந்த திராட்சையுடன் கலந்துபெரிய சீனாக் களிமண் ஜாடியில் நொதிக்க வைத்து,இரண்டு நாட்களுக்கு ஒரு முறை,நன்கு கிளரிவிட வேண்டும்.48 நாட்களுக்கு குறையாமல் இருட்டறையில் வைத்திருந்து பின் அதை வடிகட்டி,வெயிலில் வைத்து எடுக்கலாம்,அல்லது லேசாக வெது வெதுப்பாக வரும் வரை(அதிகம் சூடாக்கி விடக்கூடாது),சூடாக்கியபின்(இது அதிகம் புளிப்பாகாமல் தடுக்கவே இது)மூடி ஓட்டை போட்ட பாட்டில்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.இது நல்ல சிவப்பு ஒயின்.இது உடலுக்கு நன்மை பயக்கும்.சீனி சேர்த்து செய்யக்கூடாது.அது உடலுக்கு நல்லதல்ல. கடைகளில் விற்பது சீனி சேர்த்த ஒயினே.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    அன்பன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  10. நான் இன்று திரு.மூ.ஆ.அப்பன் அவர்களுடன் பேசி நலம் விசாரித்தேன்.

    ReplyDelete
  11. சிறுநீரகத்திற்கும் மூட்டு வலிக்கும் உள்ள தொடர்பை அருமையாக விளக்கியுள்ளீர்கள்...என் போன்ற acupuncture மாணவர்களுக்கு உங்கள் பதிவுகள் மிகவும் உதவியாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  12. நன்றி திருமதி வினோதினி அவர்களே,
    நேற்று முழு நிலவு தினம் ஆதலால் நான் பாண்டியூருக்கு சென்றுவிட்டேன்.எனவே நான் உங்களுக்கு பதில்,தர தாமதம் ஆகிவிட்டது.திரு மூ.ஆ.அப்பன் என்னிடம் பேசினார்.உங்கள் நலம் விசாரிப்பைப் பற்றி கூறினார்.மிக்க நன்றி.இது போன்ற விசாரிப்புகளால் அவர் மனம் நெகிழ்ந்து என்னிடம் பேசினார்.அவர் நலம் அடைய இறைவனிடம் வேண்டுவோம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    அன்பன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  13. மிக்க நன்றி திரு மேக்ஸ் அவர்களே,
    சிறு நீரகம் என்பது ஒரு வடிகட்டி வேலை செய்கின்ற ஒரு வடிகட்டி என்றுதான் ஆங்கில வைத்திய முறை வைத்தியர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அதற்கும் மேல் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் செயல்படும் ஒரு உயிருள்ள புத்திசாலியான உறுப்பு என்பதை மறந்துவிடுகிறார்கள்.ஆனால் சித்த வைத்தியம்,அக்கு பஞ்சர்,ஹோமியோபதி மற்றும் யூனானி வைத்திய முறைகள் முறையான முறைப்படுத்தப்பட்ட வழிகளில் வியாதி குணமாக்கலை நடைமுறைப்படுத்துகின்றன.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    அன்பன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  14. அய்யா ,
    சென்ற பௌர்ணமி அன்றே , தங்களுடைய சபையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் ., காலம் அனுமதிகவில்லை ., அடுத்த பௌர்ணமி தினத்தில் பாண்டியூரில் இருக்க சித்தரை வேண்டுகிறன் .,

    குறிப்பு : எனுடைய பதிவிற்கு தாங்கள் கருத்துரை எளிதியத்தில் மிக்க மகிழ்ச்சி ., பின் வரும் பதிவிற்கும் தங்களுடைய கருத்துரை வரவேற்கிறேன் ........,

    ReplyDelete
  15. மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே,
    எங்கள் சபைக்கு வருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.எப்போதும் இயற்கை(இறை என்றும் அழைக்கலாம்) தன்னை மீறி,தன் விதிகளை மீறி செயல்பட யாரையும் அவ்வளவு எளிதாக அனுமதிப்பதில்லை. எங்கள் சபைக் கட்டடம் கட்ட அந்த்க் காலத்தில் பெரும் பொருளுதவி செய்தவர் ஆன்மிகச் செம்மல் திருமிகு கருப்பையா ஆசாரி அவர்கள். அவர் என்னிடம் நேரடியாகச் சொன்ன விஷயத்தைக் கூறுகிறேன்.அவர் பேரனுக்கு எங்கள் மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் உபதேசத்தை செய்து வைக்க கேட்டார்.இது போன்ற மூத்த உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வைக்கும் போது அவர்களுக்கு உடனே செவிசாய்ப்பது குருநாதர் பார்த்தசாரதி ஐயா அவர்கள் பழக்கம்.இது ஐ.நா. சபையில் வல்லரசு நாடுகளுக்கு இருக்கும் வீட்டொ பவர் போல இது.உபதேசத்திற்கு முன் இரு கூட்டங்களுக்கு வந்திருந்தால் மட்டுமே உபதேசம்.அப்போதுதான் சித்தர் தத்துவம் என்றாலே, என்ன என்று புரியும்.இவர் பேரனும் இரண்டு கூட்டங்களுக்கு வருவார்.உபதேசத்தன்று வர மாட்டார்.ஐயா மட்டும் வருவார், என்ன என்று கேட்டால் கிளம்பும்போது பேரனின் அம்மா(மருமகள்) நெஞ்சு வலிப்பது போல இருக்கிறது,என் மகனை கடைசிக் காலத்தில் பக்கத்தில் வைத்து பார்த்துவிட்டு போகிறேன் என்று கூறியதால் விட்டு விட்டு வந்துவிட்டேன்,முடிந்தால் கடைசிப் பேருந்திற்கு வந்து சேர் என்று சொல்லிவிட்டு வந்தேன்,என்பார் அடுத்த தடவை வரும்போது அவரின் மருமகளுக்கு நெஞ்சு வலி எப்படி இருக்கிறது என்று விசாரித்தேன்,நெஞ்சு வலிதானே அன்றைக்கு ராமநாதபுரத்தில் இருந்து கடைசிப் பேருந்து இரவு 8.30.அது புறப்பட்ட பின் அதாவது 9.00 மணிக்கு சரியாய்ப் போய்விட்டது என்றார். இது போல பல முறை முயற்சித்தும் உபதேசம் வாங்க முடியவில்லை என்று வருந்தினார்.அவருடைய விருப்பம் நிறைவேறியதா இல்லையா என்று எனக்குத் தெரியாது.அவர் பேரன் இதுவரை மாதாந்திர சபைக் கூட்டங்களுக்கு வந்ததே இல்லை.எனவே முழு மனதுடன் இறைவனை வேண்டுங்கள்.இறை வழிவிடும்.இறை வழிவிட்டால்தான் கைகூடும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    அன்பன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  16. "எப்போதும் இயற்கை(இறை என்றும் அழைக்கலாம்) தன்னை மீறி,தன் விதிகளை மீறி செயல்பட யாரையும் அவ்வளவு எளிதாக அனுமதிப்பதில்லை."
    100 % சரியாக சொனீர்கள் .., !!!! அநெகமாக ., நான் சென்ற பௌர்ணமி அன்று வந்திருந்தால் ., இந்த தத்துவம் தான் கிடைத்திருக்கும் ., என நினைகிறன் .


    இப்படிக்கு .,
    புலிபனி சித்தர் அடிமை .,
    சித்தர் பைத்தியம் .,

    ReplyDelete
  17. அய்யா,
    தஙகளின் வலைப்பூவை சிலகாலம் வாசித்து வரும் அன்பர்களில் நானும் ஒருவன்.
    பல நோய் தீர்க்கும் வைத்திய குறிப்புக்கள் தாங்கள் வெளியிடுவது மிகவும் அருமை,மற்றும் பயனுள்ளதாகவும் உள்ளது.
    அன்மையில் நீரழி நோய் பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ள ஒன்று.தற்பொழு மியன்மாரில் வசிக்கும் நான் ஒரு சில நண்பர்களிடதும் தங்கள் வலைப்பூவையும் அறிமுகம் செய்துள்ளேன்.தொடர்ந்து தங்களின் ஆன்மீகப்பணி தொடர வேண்டும் என்பது என் அவா.
    அன்பன்,
    பன்னீர்செல்வம் மலேசியா

    ReplyDelete
  18. அன்புள்ள அய்யா,
    தங்களின் காப்பி, டீ மற்றும் குளிர்பானங்கள் பற்றிய கட்டுரை மிகவும் நன்று.தொடர்க உங்களுடைய ஆன்மிகப்பணி.
    அன்பன்.
    பன்னிர்செல்வம் மலேசியா

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்