மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, September 14, 2010

சித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 3

எனக்கு நீங்கள் சொன்ன மாதிரி புடம் போட எல்லாம் முடியாது.எளிதான வழி சொல்லுங்கள் என்று கூறும் உங்களுக்கு ஒரு எளிதான வழி இதோ.



பெரும் பூசணிக்காய் கொண்டு வந்து அதில் ஒரு இடத்தை சிறு சதுரத்துண்டு எடுத்து (மீண்டும் அதை மீண்டும் அடைப்பது போல் இருக்க வேண்டும்) அப்பிரகம் பொடி செய்து வஸ்திரகாயம் (நல்ல சல்லாத் துணியினால்(சிறு கண் கொண்ட ) சலித்து எடுத்து ) செய்த பொடியை நிரம்ப அடைத்து அதற்குள் உலை ரசம் விட்டு முன்னர் எடுத்த வில்லையை வைத்து ஏழு சீலை மண் செய்து உறிக்குள் வைத்து அடுப்புக்கு மேலே (௪௰௫(45)) நாற்பத்து ஐந்து நாள் வைத்திருந்து (௪௰௬(46)) நாற்பத்து ஆறாவது நாள் கீழே ஒரு பாத்திரம் வைத்துக் கொண்டு ஊசியினால் ஷ காயின் (அந்தக் காயின்) அடியில் துவாரம் செய்தால் ரசம் விழும்.

இந்த ரசத்தையே ரச மணி கட்ட உபயோகிக்க வேண்டும்.இந்த ரசம் (2)இரண்டு விராகனிடை ஒரு மண்சட்டியில் விட்டு சரக் கொன்றைப்பூ ரசம் சுருக்குக் கொடுக்க ( ரசத்தை சட்டியில் விட்டு சட்டி சூடாகும் போது சரக் கொன்றைப் பூச் சாறு சிறிது சிறிதாக விடுவதையே சுருக்கு என்பார்கள் ) ரசம் மணியாகும்.சட்டியை சூடாக்கும் போது அடுப்பை தீபாக்கினி எரிவு எரிக்க வேண்டும்.( அடுப்பை தீபாக்கினி எரிவு எரித்தல் என்றால் தீபம் எப்படி எரியுமோ அப்படி எரிக்க வேண்டும் )
மீண்டும் ஒரு சுவாரசியமான மடலுடன் தங்களைச் சந்திக்கிறேன்.
நன்றி
என்றென்றும் அன்புடன்
சாமீ அழகப்பன்

Post Comment

8 comments:

  1. நன்றி திரு சாமீ அழகப்பன். நம் உண்மையான செல்வம், நம் முன்னோரின் அனுபவ அறிவு பெட்டகங்களே.உங்கள் பங்கு போற்ற தகுந் தது.
    வாழ்்்துகள் பல. இ்ை(ரச மணி ) உண்மையாய் செய்பவர்கள் உண்டா?

    ReplyDelete
  2. நான் ரசமணி செய்வது மட்டுமல்ல,அதைத்தான் உங்களுக்கு கற்றுக் கொடுத்தும் விட்டேனே!இதற்கு மேலும் ஏன் இத்தனை சந்தேகம்.ரசமணி நான் செய்துவிட்டேன்,என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிறையப் பேர்கள்,(ரசத்தையும்(MERCURY) காரீயத்தையும்(LEAD)உருக்கி கலந்து ரசமணி என்று பொய் சொல்லித் திரிகிறார்கள்.போலி ரசமணியைப் பார்த்தாலே அது பளபளப்பற்று,இருக்கும்.பேப்பரில் எழுதினால் பென்சில் போல எழுதும்.அதனால் ஒரு பயனும் இல்லை.இது போல சித்த ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது என்றிருந்த தடையை உடைத்தெறிந்தே இவைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.என் குழந்தைகள் இவைகளை போற்றிப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.எனவேதான் அனைவரும் இந்த விஷயங்களை வெளிப்படையாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.அனைவரும் பயன்பெற வேண்டுகிறேன்
    நன்றி
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. அருமை அருமை !!! கோடான கோடி வாழ்த்துக்கள் அய்யா ..,

    ReplyDelete
  4. தங்களின் வலைப் பூ கண்டேன்.என்னோடு என் கருத்தோடு என்னில் இணைந்த நண்பரைக் கண்ட பேரானந்தம்.உங்களின் வலைப் பூவில் இணைந்திருக்கிறேன்.
    நன்றி
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. அய்யா , மனிக்கவும் அது என்னுடைய வலைப்பூ ஆல்ல , நான் follow செய்யும் வலைப்பூ , இருந்தாலும் நான்னும் அதே எண்ணத்தோடு வாழ்பவன் .
    நன்றி
    இப்படிக்கு
    மனோஜ் குமார்
    கோவை

    ReplyDelete
  6. அய்யா புலிப்பாணி தங்கள் பதில் கிடைத்தது.எப்படி இருந்தாலும் எனக்கு ஒரு வலைப்பூ தொடர்பு கிடைத்தது.அதற்கும் நன்றி
    நன்றி
    இப்படிக்கு
    சாமீ அழக்ப்பன்

    ReplyDelete
  7. thangalidam rasamani kidaikkuma appadi kidaithaal evvalavu aagum.konjum koorungalaen

    ReplyDelete
  8. Please sollunga....thangalidam rasamani kedikkuma? kedaithall....evaluvu agum,, thayavu seithu sollungal....
    sivakumar_npt@yahoo.co.in

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்