மொழி பெயர்ப்புக் கருவி

Thursday, August 25, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 42)ஞானம் 1

ஞானம் என்றால் என்ன????(பாகம்1)
அன்புள்ள பதிவு வாசகர்களே,
ஞானம் என்றால் என்ன????ஞானம் அடைவது எப்படி??????நான் ஞானியாகிவிட்டேனா என்று தெரிந்து கொள்வது எப்படி????இப்படி உங்களுக்கு பல கேள்விகள் எழுந்திருக்கலாம்.அல்லது எழாமலும் இருக்கலாம்.


எனது நண்பர் ஒருவர் (பெயர் மாணிக்கம்) என்னிடம்"நான் பிறந்து கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த பூமியில் நிறைய இன்பங்கள் இருக்கின்றன. அவற்றை அனுபவிக்கவே நான் இங்கே வந்துள்ளேன்.என்னால் தியானம் எல்லாம் செய்ய முடியாது. தியானம் ஏன் செய்ய வேண்டும்" இப்படிக் கேட்டார். 


இதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு வித்தியாசமான ஆளை சந்தித்துவிட்டேன் என்று எண்ணினேன். இதற்கு பதிலாக ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்த்தேன்.அவர் மீண்டும் என்னைப் பார்த்து "நீங்கள் இரண்டாம் நிலையில் உள்ளீர்கள்,முதல் நிலையில் உள்ளவர்களுக்கு ஏதாவது சொல்லுங்கள்" என்றார்.நான் அதற்கு ஆதிபராசக்தி படத்தில் வருவது போல காளியாத்தா!!! மாரியாத்தா!!! என்று முழு சிரத்தையுடன் சொன்னால் போதும் இறைவனை அடையலாம் என்றேன்.அவருக்கு இது முழு திருப்தி!!!!


இது போதுமா????? போதாது எனில், எது சரி?????.எப்படி இறைவனைக் காணலாம்.அவருடன் அளவளாவலாம்.இறைவன் ஏற்படுத்திய விதிகளை அவரே தளர்த்துவாரா????இறைவனுடன் எப்படிப் பழகலாம்???இறைவனுடன் இறைவனுக்கு வேலைக்காரன் போலப் பழகலாமா????இறைவனுடன் இறைவனுக்கு மகன் போலப் பழகலாமா????இறைவனுடன் இறைவனுக்கு நண்பன் போன்று பழகலாமா???? இறைவனுடன் இறைவனுக்கு சீடன் போலப் பழகலாமா???? கேள்விகள் பல???? விடைகள் கீழே கிடைக்கலாம்!!!!!


இந்த பட ஒளிக்காட்சியை காணுங்கள்!!!!




என் நண்பரோ பிறந்து கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.நந்தனாரோ பிறவா வரம் வேண்டும் என்று கேட்கிறார்.அப்படிப் பிறந்தாலும் இறைவா உனை மறவா வரம் வேண்டும் என்று கேட்கிறார்.எது சரி!!!


சரியை மார்க்கம்.(தாசமார்க்கம்)
எளிய நல் தீபம் இடல் மலர்கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன் மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே
                         (திருமந்திரம்)
இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்று தீபம் இடுதல்,கோவில் நந்தவனத்தில் மலர் கொய்து,மாலையாக கோர்த்து இறைவனுக்கு அர்ப்பணித்தல்,கோவிலை தண்ணீர் கொண்டு மெழுகி சுத்தம் செய்தல்,தூர்த்து சுத்தம் செய்தல், இறைவனை வாழ்த்திப் பாடுதல், மற்றும் உள்ள கோவில் காரியங்கள் அத்தனையும் செய்தல், திருமஞ்சனம்,இறைவனுக்கு வேண்டிய அபிஷேக ஆராதனைக்கு வேண்டியவைகளை செய்து,கோயில் தளிகைக்கான பிரசாதத்துக்கு ஏற்பாடு செய்தல்,இறைவனின் அடியார் மற்றும் இறை திருவடிவம் கண்டு பணிதல் ஆகியவை அனைத்தும் சரியை மார்க்கம் ஆகும்.


இந்த மார்க்கத்துக்கு எடுத்துக்காட்டு திருநாவுக்கரசர். இந்த சரியை மார்க்கத்தை தாச மார்க்கம் என்றும் அழைப்பர்.இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே ஒரு எஜமானனுக்கும் ஒரு வேலைக்காரனுக்கும் இருக்கும் பாவனை போல இருப்பதால் இது தாச மார்க்கம் என அழைக்கப்படுகிறது.



கிரியை மார்க்கம்.(சற்புத்திர மார்க்கம்)






பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்ட ன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)
ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.
                      (திருமந்திரம்)
இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனுக்கு பூசனைகள் செய்தல், இறைவன் புகழையும்,அவன் நாமங்களையும், பக்தி கீதங்களையும் வாசித்தல், இறைவனைப் போற்றுதல், மந்திரங்களைச் செபித்தல், குற்றங்களற்ற நல்ல தவம் புரிதல், வாய்மையுடன் இருத்தல், உடலிலும் மனத்திலும் அழுக்கின்றி இருத்தல், மன நேசிப்புடன் தகப்பனுக்கு சோறிட்டு கவனிப்பது போல், கோவில் தளிகையிட்டு இறைவனுக்கு நீர்விளாவி கவனிப்பது ஆகியவை கிரிகை மார்க்கமாகும்.

இந்த மார்க்கத்துக்கு எடுத்துக்காட்டு திருஞான சம்பந்தர். இந்த கிரியை மார்க்கத்தை சற்புத்திர மார்க்கம் என்றும் அழைப்பர்.இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே ஒரு தகப்பனுக்கும் ஒரு மகனுக்கும் இருக்கும் பாவனை போல இருப்பதால் இது சற்புத்திர மார்க்கம் என அழைக்கப்படுகிறது.





அடுத்து இதே தலைப்பில் சித்தர் விஞானம் 43ல் ஞானம் என்றால் என்ன????(பாகம் 2)ல் இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம் .






அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Wednesday, August 24, 2011

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 8

திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.


திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.இவ்வரிய நோய் நீக்கும் உணவுக் கலையையும், நோய் வருமுன் காக்கும் நோயணுகா விதியைத் தெரிந்து கற்க ஓர் அரிய வாய்ப்பு இதோ கீழே காத்திருக்கிறது.


வரும் செப்டெம்பர் மாதம் 26-09-2011 முதல் அக்டோபர் மாதம் 02-10-2011 வரை ஆகிய தேதிகளில் யோகா மற்றும் இயற்கை நல வாழ்வு முகாம் குலசேகரபட்டணத்தில் நடக்க இருக்கிறது.இந்த நிகழ்வு ஜனவரி மாதத்திற்கு பின் தற்போதுதான் நடை பெறுகிறது.திரு மு.ஆ.அப்பன் அவர்களின் துணைவியார் மறைவிற்குப் பின் வெகு நாட்கள் கழித்து நடைபெறும் முகாம் இது.பங்கு பெறுங்கள் பயனடையுங்கள்.




திரு.மூ.ஆ.அப்பன் எழுதிய இயற்கை உணவு பற்றிய கட்டுரை இவ்வார ராணி வார இதழில் வெளியாகியுள்ளது.மேலே அது வெளியிடப்பட்டுள்ளது.படித்து இன்புறுங்கள்.


கற்றிடுவோம் சாகாத கல்வி!!!  


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்   

Post Comment

Saturday, August 20, 2011

மதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறும் மதியில்லா ஆலோசகர்களும்

மதிகெட்ட மத்தியஅரசும், அரசாங்கத்துக்கு(ஆரோக்கியம் பற்றி) ஆலோசனை கூறும் மதியில்லா அரசியல் ஆலோசகர்களும்(பாகம்2)



அன்புள்ள பதிவு வாசகர்களே,
நமது அரசு அணு ஆயுத பரிசோதனை செய்த போது அமெரிக்கா நமது நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தது.ஆனால் இந்தத் தடை நமக்கு ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.


எனவே அதன் காரணத்தை ஆராய்ந்த அமெரிக்கா நமது விவசாயம்தான் நம்மை கவசம் போல காக்கிறது என்பதை கண்டு கொண்டது.எனவே நமது விவசாயத்தை தொலைத்துக் கட்டும் முயற்சியில் இறங்கியது.அதற்காகவே நமது நாட்டில் நுழைந்தது மான்சான்ட்டோ என்ற அமெரிக்க விதைக் கம்பெனி.


நமது நாடு பல்லுயிரினப் பெருக்கம் உள்ள நாடு. அதாவது நமது நாட்டில் பலவிதமான தாவர, விலங்கு, கடலுயிரினங்கள் கொண்ட நாடு. வேறெந்த நாட்டுக்கும் இந்தச் சிறப்பு இல்லை. இறைவன் அவ்வாறு நம் நாட்டை படைத்துள்ளான். இப்படி ஒரு இறைவனின் கொடையை கொடூரமாக சிதைக்க வந்த அரக்கன்தான் மான்சான்ட்டோ என்ற அமெரிக்க விதைக் கம்பெனி.

மான்சான்ட்டோ என்ற அமெரிக்க விதைக் கம்பெனி பல தற்கொலை விதைகளை சந்தைப்படுத்தி வருகிறது.இதனால் நேரும் விளைவென்ன தெரியுமா?இந்த தற்கொலை விதைகள் ஒரு முறை மட்டுமே விளைச்சல் கொடுக்கும்.மறுமுறை இந்த விதைகளை விதைத்தால் அவை முளைக்காது. அவை மலடாகிப் போகும்.


இந்த மலட்டு பயிர்களின் மகரந்தம் மற்ற பயிர்களில்,தாவரங்களுடன் மகரந்தச் சேர்க்கை நடந்தால் அனைத்து பயிர்களும்,தாவரங்களும் மலடான இதே போன்ற விதைகளைத்தான் உற்பத்தி செய்யும்.இந்த மலட்டு விதைகள் பல சத்தான அமோக விளைச்சலைக் கொடுக்கும் என்றும்,அதிக மகசூலைத் தரும் என்றும் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்படுகிறது.


இறைவனுக்குத்(இயற்கைக்கு) தெரியாதா எதை எப்படிப் படைக்க வேண்டும் என்று??????சத்துக் கூடிய விளை பொருட்கள் என்று, வீரியக் கம்பு, கேழ்வரகு, என்று பலதை மரபணு மாற்றியதன் விளைவு ஒன்றிலும் அதன் ருசியும் வாசனையும் இன்றி மண்ணைத் தின்பது போல் உள்ளது.


பலவிதமான சத்துக்களை,தேவையில்லாமல் உடலில் சேர்த்ததன் விளைவு பல பெயர் தெரியாத வியாதிகள்.(எடுத்துக்காட்டாக வீரியப்படுத்தப்பட்ட சோயாவை சாப்பிட்டவர்களுக்கு சிறு நீரக செயலிழப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதைவேறு  தனி இணைப்புகளாக வெளியிட வேண்டாம் என்று எண்ணுகிறேன். தேடியந்திரத்தில் தேடிக் கொள்க!!!) 


தற்போது சர்க்கரை வியாதியும், குழந்தையின்மையும், இதயத் தாக்கு, சிறு நீரக செயல் இழப்பு, பக்க வாதம், இரத்தக் கொதிப்பு சர்வ சாதாரணமாகக் காணப்படும் காரணம் புரிகிறதா?????


நம் பாரம்பரிய விதைகளை நாம் பயிர் செய்யாமல் விட்டுவிட்டதே காரணம்.அவற்றில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை காக்கும் கவசம் இருந்தது. அவற்றை தொலைத்துவிட்டு ஆரோக்கியமற்றவர்களாக அலையத் தயாராக்கிவிட்டதற்கு காரணம் யார்????வேறு யார்???நமது திருவாளர் மத்திய அரசாங்கம்தான்.



இந்த மான்சான்ட்டோவின் மலட்டு விதைகளை விளைவிக்கும் நிலங்கள் விஷத்தன்மை அடைந்து விவசாயத்திற்கு தகுதி அற்ற நிலங்களாக மாறிப் போகும்.இவற்றை உண்டால் மனிதர்களும் மலடாகிப் போவார்கள்.(PT பருத்தி விதை, PT கத்திரிக்காய் போன்றவை எல்லாம் இந்த ரகங்கள்தான்)


பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த நம் நாடு மலடான உயிர்களை உற்பத்தி செய்தால் விளைவு நம் நாடு உயிர்களே இல்லாத பாலைவனமாகும்.ஒரு முறை விளையும் விதைகளை வாங்கிப் பயிர் செய்த நம் விவசாயிகளுக்கு அடுத்த முறை விதைக்க விதையின்றி,விதைக்காக மான்சான்ட்டோவிடம் கையேந்த வேண்டும்.


கடைசியில் நிலம் பாழான பின் தற்கொலை செய்து சாவதைத் தவிர வேறு வழியில்லை நம் இந்திய அப்பிராணி விவசாயிக்கு.இந்த நிலையை உண்டாக்கியது யார்???? வேறு யார்???நமது திருவாளர் மத்திய அரசாங்கம்தான்.கீழ்க்கண்ட காணொளிகளைக் காணுங்கள்.  
http://www.youtube.com/watch?v=2UVMLTk8Z4U&feature=related
http://www.youtube.com/watch?v=xy-Tyg_d88A&feature=related
மரபணு சம்பந்தமான பொறியியல்G.E(GENETIC ENGINEERING),மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் GMO'S (GENETICALLY MODIFIED ORGANISMS) நமது மனித சமுதாயத்திற்கு பெரும் கேடாய் முடியப் போகிறது.பல நாடுகளில் இவற்றைத் தடை செய்திருக்கும் சூழ்நிலையில் விவசாயத்தை பெரும் அளவில் செய்து வரும் நம் நாட்டில் இதற்கு வழி வகுத்தால் விளைவு பெரும் சீரழிவு என்பதில் ஐயம் இல்லை.கீழ்க்கண்ட இணைய தளத்தை பார்வையிடுங்கள். 
கீழே கொடுத்திருக்கும் இணைப்புக்கு சென்று இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கும்,தாவர விளை பொருள்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஒரு ஓட்டை பதிவு செய்யுங்கள்.இது ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் கட்டாயக் கடமை.நிறைவேற்றுங்கள்.
http://www.greenpeace.in/take-action/save-your-food/stop-the-brai-bill-tyf.php
கீழ்க்கண்டவற்றையும் பாருங்கள்.


நன்றி பூவுலகு


அடுத்து இதே போன்ற விஷயத்தின்(விஷங்களின்) தொடர்ச்சியை அடுத்தடுத்த நோயணுகா விதிகள் பதிவுகளில் விவரிக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment