மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, January 16, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(22)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 4)

வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(21)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 3) ன் தொடர்ச்சியே!!! அதைப் படித்துவிட்டு பின் இந்தப் பதிவுக்கு வாருங்கள்.அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாது புரியும்.

வாஸ்து புருஷன் நித்திரை விட்டு எழுந்தருளும் காலங்கள்.


இந்தப் பதிவை படிக்கும் முன்னர் சித்தர் விஞ்ஞானம் பாகம்(4) பதிவை ஒரு பார்வை பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.அப்போதுதான் இந்தக் கணக்குகள் புரியும்.


சித்திரை மாதம் 10ந் தேதி (5 நாழிகை) காலை 8மணி முதல் 9 1/2 வரை (3 3/4 நாழிகை=ஒன்றரை மணி நேரம்=ஒரு முகூர்த்தம்),


வைகாசி மாதம் 21ந் தேதி (8 நாழிகை)காலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம்,


ஆடி மாதம் 11 ந் தேதி (2 நாழிகை) காலை 6 மணி 48 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரை,


ஆவணி மாதம் 6 ந் தேதி (10 நாழிகை) காலை 10 மணி முதல் நண்பகல் 11 மணி 30 நிமிடம் வரை,


ஐப்பசி மாதம் 11 ந் தேதி (2 நாழிகை) காலை 6 மணி 48 நிமிடம் முதல் காலை 8 மணி 18 நிமிடம் வரை,


கார்த்திகை மாதம் 8 ந் தேதி (10 நாழிகை) காலை 10 மணி முதல் நண்பகல் 11 மணி 30 நிமிடம் வரை,


தை மாதம் 12 ந் தேதி (8 நாழிகை)காலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரை,


மாசி மாதம் 22 ந் தேதி (8 நாழிகைகாலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரை,


பங்குனி மாதம் 22 ந் தேதி (8 நாழிகைகாலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரை,


வாஸ்து புருஷன் விழித்திருக்கும் காலம் ஆகும்.

வாஸ்து புருஷன் எழுந்திருந்து மீண்டும் உறங்கப் போகும் நேரமே வாஸ்து நேரம் என்றழைக்கப்படுகிறது. வாஸ்து புருஷன் எழுந்து மீண்டும் உறங்கப் போகும் நேரத்தை ஐந்தாகப் பிரித்துள்ளார்கள்.


வாஸ்து புருஷன் எழுந்தவுடன்

(1)தந்த சுத்தி(பல் விளக்குவது)(பாகம் 1)
(2)ஸ்நானம்(குளிப்பது)(பாகம் 2
(3)பூஜை புனஸ்கார இறைவழிபாடு(பாகம் 3)
(4)உணவுண்ணல்,ஊர் விசாரணை(பாகம் 4)
(5)தாம்பூலம் தரித்தல்(பாகம் 5)


இந்த வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள ஐந்து பிரிவினுள் கடைசி இரண்டும் வாஸ்து செய்ய உகந்தது. அவை இரண்டும் 
ஊர் விசாரணைபாகம் 4 ),

தாம்பூலம் தரித்தல் பாகம் 5 ).


அதாவது எழுந்து உறங்கப்போகும் கால அளவான 3 3/4 நாழிகையில் (அதாவது ஒன்றறை மணி நேரமான ஒரு முகூர்த்தம்,அதாவது 90 நிமிடம்,அல்லது 1 1/2 மணி நேரம்)கடைசி ஐந்தில் இரண்டு பாகமான



3.75 நாழிகை /5 பாகம் = 0.75 நாழிகை/ஒரு பாகத்துக்கு


எனில் இரண்டு பாகத்துக்கு =  0.75 * 2 = 1 1/2


1 1/2 நாழிகை,அதாவது 1.5 நாழிகை * 24 நிமிடங்கள் = 36 நிமிடங்கள்


அல்லது


மொத்த வாஸ்து கால அளவு 90 நிமிடங்கள்/5 பாகம் = 18 நிமிடங்கள் ஒரு பாகத்துக்கு எனில்


கடைசி இரு பாகம் ஊர் விசாரணை(பாகம் 4), தாம்பூலம் தரித்தல் பாகம் 5 )

 2 * 18 = 36 நிமிடங்கள்


இந்த கடைசி 36  நிமிடமே வாஸ்து செய்ய உகந்தது.அதாவது வாஸ்து நேரக் கடைசியில் இருந்து 36 நிமிடங்கள் முன்னால் ஆரம்பித்து வாஸ்து செய்ய வேண்டும்.புரியவில்லை எனில் கேளுங்கள்.


பதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(24)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் ஐந்தில் காணுங்கள்)

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(21)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 3)


வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2) ன் தொடர்ச்சியே!!! அதைப் படித்துவிட்டு பின் இந்தப் பதிவுக்கு வாருங்கள்.அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாது புரியும்.

பரமாணு என்பது உலகங்கள் எல்லாம் நிறைந்து இருக்கும் ஒன்று.இதையே ரெய்-கி ல் குணமளிக்க ரெய்-கி ஹீலர்கள் உபயோகிக்கின்றனர்.அது பற்றி மற்றொரு பதிவில் இடுகிறேன்.இந்த பரமாணுக்கள் நிலத்தில் வந்து குவியும் நேரமே வாஸ்து புருஷன் எழுந்திருக்கும் நேரமாக சித்த புருஷர்களும்,நம் தமிழர் விஞ்ஞானமான சிற்ப சாஸ்திர சிந்தாமணியில் குறிப்பிடுகின்றனர்.

இந்த பரமாணுவே இயங்கு சக்தியாகவும், இயக்க சக்தியாகவும்,(கிரியா சக்தி, KINETIC ENERGY ) , நிலைச் சக்தியாகவும்(இச்சா சக்தி,POTENTIAL ENERGY ), திகழ்கிறது. இவையிரண்டையும் உணர்வது ஞானசக்தி(WISDOM). முருகன் (ஞான சக்தி),வள்ளி (இச்சா சக்தி),தெய்வானை(கிரியா சக்தி).

மேற்கூறிய இவற்றை வடிவங்களில் கொடுத்தால் நம் மக்கள் புரிந்து ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்கள் என்றுதான் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.இது போலவேதான் ராசி மண்டலங்களையும் அந்தந்த வடிவங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

அஸ்வினி(முழுவதும்),பரணி(முழுவதும்),கார்த்திகை(முன் கால் பகுதி மட்டும்) சேர்ந்தது மேஷம்(ஆட்டின் தலை வடிவில் இருக்கும்) இது ஒரு நட்சத்திரக் கூட்டமே இந்த வடிவத்தில் இருப்பதால் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.இது 30 பாகை அளவில் இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பே.இது போல பனிரெண்டு ராசிகளுக்கும் சேர்த்து 30*12 = 360 பாகைகள் கொண்டது ஒரு வட்டம்.

ஒரு கதையை இங்கே கூற வேண்டும் அகத்தியர் என்று குறுமுனி இருந்தார் எனவும்(இவர் பதிணெண் சித்தர்களில் ஒருவர்) அவர் ஏழு கடல்களையும் ஒரு கையில் எடுத்துக் குடித்தார் எனவும்,அவர் மனைவி லோபா முத்திரை எனவும் கதையாக கூறியுள்ளனர்.

பெரியது என்ன என்று முருகன் ஔவையாரிடம் கேட்க அவர் கூறிய பாடல் இதோ

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ, நான் முகன் படைப்பு!
நான்முகனோ, கரிமாலுந்தியில் வந்தோன்!
கரிய மாலோ, அலைகடல் துயின்றோன்!
அலைகடல் குறுமுனி யங்கையில் அடக்கம்!  
குறுமுனியோ, கலசத்திற் பிறந்தோன்!
கலசமோ, புவியிற் சிறுமண்!
புவியோ, அரவினுக் கொருதலைப் பாரம்!
அரவோ, உமையவள் சிறுவிரன் மோதிரம்!
உமையோ, இறைவர் பாகத் தொடுக்கம்!
இறைவரோ, தொண்டர் உள்ளத் தொடுக்கம்!
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!
ஔவையார்

நீல நிறத்தில் கொடுத்துள்ளவைகள் அகத்தியரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள விடயங்கள்,கவனியுங்கள்.  
கதையில் உள்ளபடியே லோபாமுத்ரா நட்சத்திர மண்டலம் அகத்திய நட்சத்திர மண்டலத்தையே சுற்றிச் சுற்றி வருகிறது.கணவனைத்தானே மனைவி சுற்றுவாள்.அப்போது அகத்தியரின் மனைவி லோபாமுத்திரை.இப்படிச் சொன்னால் உங்களுக்கு மறக்காதுதானே!

மேலும் அகத்தியருக்கு கும்ப முனி என்றும் பெயர்.
அகத்திய மண்டலம்,கும்ப ராசியும்,சூரியனும் ஒரே நேர் கோட்டில் வரும்போது ஏழு கடல்களிலும் நீர் மட்டம் குறைகிறது என்று இப்போது புவியியல் நிபுணர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.எனவே தமிழர்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டார்கள், என்பதை நிரூபணம் செய்ய இதைக் கூறவில்லை.நம் முன்னோர்கள் கூறிய கதைகளின் மூலம் எதைக் கூற விரும்புகிறார்கள் என்று நாம் ஆராய்ச்சி செய்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு மக்களை சிந்திக்கத் தூண்டுவதே எனது பதிவுகளின் நோக்கம்.தவிர மூடத்தனமாக பழக்க வழக்கங்களை அப்படியே கடைப் பிடிக்காமல் ஆராய்ச்சி செய்து பொருள் புரிந்து பின் கடைப் பிடித்தால் அதில் தவறுகளும் நேராது.எதற்கு கவனம் கொடுக்க வேண்டும் என்பதும் புரியும்.  

பதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(22)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் நான்கில் காணுங்கள்)



அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

Saturday, January 15, 2011

பொங்கல் ஸ்பெஷல்(பாகம் 1)

முதலில் வாசக அன்பர்களுக்கு என் மனம் கனிந்த அன்பார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
பொங்கலுக்கு நம் எல்லோர் வீட்டிலும் மாவிலையும்,கண்ணுப் பூழை என்றழைக்கப்படும் கூரைப் பூவும் ( சிறு கண் பீழை ) மாவிலையும் கூரையில் வைத்துக் காப்புக் கட்டுவார்கள்.நமது முன்னோர்கள் சொல்லிவிட்டார்களென்று நமது வாகனங்கள் முதல் வைத்துவிடுவோம்.

நமது பழந்தமிழர் வாழ்வியலில் பல விடயங்கள் பொருள் புரியாமல் பின்பற்றுவதால்,மாவிலைத் தோரணம் பிளாஸ்டிக் மாவிலைத் தோரணமாக மாறும் அளவிற்குப் போய்விட்டது.பிளாஸ்டிக் மாவிலைத் தோரணத்தினால் ஒரு பயனும் இல்லை. 

மாவிலையும், சிறு கண் பீழையும் சேர்த்து வைத்து,வீட்டில் சொருகி வைக்கும் போது அவற்றில் இருந்து வரும் மூலிகைக் காற்றின் சக்தி, பனிக்காலத்தில் காற்றில் கலந்திருக்கும் கிருமிகளை அழித்தொழித்து நம்மைக் காக்கும்.இதையே காப்புக் கட்டுவது என்றழைக்கிறார்கள்.

அது மட்டுமல்ல பனிக்காலத்தில்,குளிர்ச்சி அதிகம் இருப்பதால், நாம் தண்ணீர் சரியாகக் குடிக்க மாட்டோம்.ஆனால் பனி குளிர்ச்சியாகத் தெரிந்தாலும் இயல்பில் அது மிகவும் உஷ்ணமானது.எனவேதான் வறட்சியில் தோல், உதடுகள், முகம் போன்றவை வறண்டு வெடிக்கின்றன.

அப்போது சிறு நீரகம் செயல் படத் தேவையான தண்ணீர் இல்லாததால் சிறு நீரகம் தள்ளாடத்துவங்கும். அந்த நேரத்தில் மாவிலையும், சிறு கண் பீழையும் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க வேண்டும் என்பதற்காகவே, பொங்கலன்றாவது வீட்டில் சொருகி வைத்து ஞாபகப்படுத்துகிறார்கள்.


சிறுநீரகக் கல்(URINARY COLIC),சிறுநீரகக் கோளாறுகள்(NEPHRITIS),சிறுநீரக வடிகட்டும் வலை அமைப்பு பூராவும் அடைத்துக் கொள்ளும் நிலையில் சிறுநீரகம் சுருங்கிவிடும்,தண்ணீர் நிறைந்து கிடக்க வேண்டிய சிறுநீரகம் கருவாடு போல வற்றிச் சுருங்கும் நிலையே KIDNEY FAILURE, இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பால் மூட்டுகளில் ஏற்படும் எலும்புத் தேய்மானம்,இவற்றை அடியோடு துடைத்தெரியும் வல்லமை உள்ளது மேற்கண்ட மூலிகையான கூறைப்பூ.
சிறு கண் பீழை
(கண்ணுப் பூழை,கூரைப் பூ)
பாண்டு பெரும்பாடு பகர்மூத் திரக்கிரிச்சரம்
பூண்டதிரி தோடமிவை போகுங்காண்-தாண்டிப்
பறியவே ளைத்துரத்தும் பாரவயிற் கண்ணாய்
சிறிய பீளைக்கு சிதைந்து.
(வாத, பித்த, கபம் இவற்றால் ஏற்படும் தோஷங்களால்தான், வியாதிகள் ஏற்படுகின்றன். இவற்றை திரி தோடம் என்பார்கள். முத்தோடத்தினால் ஏற்படும் மூத்திர கிரிச்சரத்தையும் இது தீர்க்கும்,மூத்திர கிரிச்சரம் என்பது சிறு நீரக மண்டலத்தில் ஏற்படும் வியாதிகளைக், குறிப்பிடுகிறது)
நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை
போரடரி ரத்தகணம் போக்குங்காண்-வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருத்துஞ் சிறுபீளை
யாமி துகற்பேதி யறி.
நீரடைப்பு,கல்லடைப்பு,குடற்சூலை(வயிற்றில் வலி உண்டாக்கும் வயிற்றுப் புண்,அடி வயிற்று வலி,அதிக சூட்டினால் உண்டாகும் அடி வயிற்று வலி) ரத்தம் கெட்டுப் போவதால் உண்டாகும் வியாதிகளைத் தீர்க்கும் வல்லமையுள்ளது சிறுகண் பீழை.


சிறுநீரக செயலிழப்பால் துயரமுறும் நபர்கள் அதிகம் பேர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசியதால்,கடந்த இரு வாரங்களாக பதிவுகளே எழுதாமல் இருந்த நான் இப்போது இந்தப் பதிவை இடுகின்றேன்.
       
கீழ்க்கண்ட மருந்துகளைக் கலந்து வைத்துக் கொண்டு, இரு வேளைகள் உள்ளுக்கு சாப்பிட உபயோகித்தால் சிறுநீரகக் கோளாறுகள்(NEPHRITIS) நீங்கி மிக்க நலம் தரும்.இந்தப் பொடியோடு அனுப் பானமாக(அனுப்பானம் என்பது மருந்துடன் சேர்த்து கொடுக்கப்பட்டு மருத்தின் செயல்படும் தன்மையை அதிகரித்து குறிப்பிட்ட விதத்தில் இட்டுச் செல்லக் கூடியதே) இளநீர் உபயோகிக்க சிறுநீரகத்திற்கு இது உயிரோட்டத்தை உண்டாக்கும் தேவாமிர்தமாக செயல்படும்.

(1) கல்நார் பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(2) சிலா சத்து பற்பம்((IMPCOPSதயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(3) ஆமையோட்டு பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(4) நண்டுக்கல் பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(5) படிகார பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(6) சிருங்கி பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(7) பலகரை பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(8) ஆனை நெருஞ்சில் பொடி(சொந்தத் தயாரிப்பாக இருந்தால் நல்லது) - 50GRAMS
(9) சிறுகண் பீழைப் பொடி(சொந்தத் தயாரிப்பாக இருந்தால் நல்லது) - 50GRAMS
(10) சிறு நெருஞ்சில் பொடி(சொந்தத் தயாரிப்பாக இருந்தால் நல்லது) - 50GRAMS


சிறு நெருஞ்சில்
நல்ல நெருஞ்சிலது நாளுங் கிரிச்சரத்தை
வல்ல சுரமனலை மாற்றுங்காண்-மெல்லியலே
மாநிலத்திற் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டுங்
கூனுறுமெய் வாதமும்போக் கும்
(வாத, பித்த, கபம் இவற்றின் திரிபால், ஏற்படும் மூத்திர கிரிச்சரத்தையும் இது தீர்க்கும்,வலிமையான சுரம், உட்சூடு,தேக எரிவு,கல்லடைப்பு,சிறு நீரக செயலிழப்பால் உடம்பில் தேங்கும் நீர்க்கட்டை உடைத்து அதிகமான கெட்ட தண்ணீரை வெளியேற்றும்.உடம்பை நிமிரவிடாது செய்யும் வாதம்,வெட்டை இவற்றை நெருஞ்சில் போக்கும்.)
மேகவெட்டை நீர்ச்சுறுக்கு வீறுதிரிதோஷம்புண்
வேகசுர தாகவெப்பை விட்டோட்டும்-போகத்
தருஞ்சின் மதலைமொழித் தையலே! நல்ல
நெருஞ்சி லதனை நினை.
மேக வெட்டை என்பது பெண்ணின்பத்தாலோ, அல்லது தேகச்சூடு அதிகரிக்கும் வண்ணம் உடலுறவு வைத்துக் கொள்வதாலோ,அதிக நேரம் இரவில் கண்விழித்துவிட்டு,பகலில் அதிக நேரம் தூங்குவதாலோ,உடற்சூட்டை அதிகரிக்கும் லாகிரி வஸ்துக்களான மூக்குப் பொடி,டீ,காப்பி,பீடி,சிகரெட்,வெற்றிலை பாக்குடன் புகையிலை சேர்த்து உபயோகித்தல், மது வகைகள் இவற்றை உபயோகிப்பதால் உருவாவது.இந்த மேகவெட்டை,நீர்ச்சுருக்கு,வீரியமுடைய திரி தோஷம்,அதி வேகமுடைய சுரம்,அதீத தாகம்,உடல் வெப்பம்,தேக காங்கை,இவற்றைத் நெருஞ்சில் தீர்க்கும்.
சூரணங்கள் அதாவது மூலிகைப் பொடிகள் 6 மாதங்கள் மட்டுமே ஆயுள் எனவே அவற்றை நாமே தயாரித்தால்தான் முழு பலத்துடன் இருக்கும்.மேலும் மூலிகைகளை நிழலில் உணர்த்தித்தான் தயாரிக்க வேண்டும்.அரைக்கும் போது அதிகம் சூடாகி வெந்து போகாமல் பொடியாக்க வேண்டும்.அப்போதுதான் மூலிகைகள் முழு பலத்துடன் செயல்படும்.

அவற்றை கல்வத்தில்(மருந்தரைக்கும் குழியம்மியில் வைத்து  அரைக்க வேண்டும்).இப்படி அரைக்கும் போது அதிகம் சூடாகி வெந்து போகாது.இப்படி இதைத் தயாரித்து கொடுத்தால் நூறு சதவிகிதம் பலன் தரும்.


இங்கே ஒரு சுவாரசியமான விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.எனது தாத்தாவின் மருத்துவக் குறிப்புகளில் (1) கல்நார் பற்பம்(சிறுநீரகம்,பிறப்புறுப்பு மண்டலம்),(2) சிலா சத்து பற்பம் ( எலும்பு மண்டலம், உடலின் அத்தனை உறுப்புக்கள்,சிறுநீரகம்,பிறப்புறுப்பு மண்டலம்),(3) ஆமையோட்டு பற்பம் (எலும்பு மண்டலம், வயிறு, கல்லீரல், மண்ணீரல்), (4) படிகார பற்பம் (குடல்புண்,சிறுநீரகம்), (5)சிருங்கி பற்பம்(எலும்பு மண்டலம்,இதயம்,இரத்தக் குழாய்கள்).


மேற்கண்ட ஐந்து பற்பங்களை கலந்து வைத்துக் கொண்டு அதை ஒரு திருநீற்றுப் பையில் போட்டு வைத்துக் கொண்டு ஏதாவது கோயிலில் சாமியார் போல் உட்கார்ந்து இருந்தால்,வரும் நபருக்கு வெறும் விபூதியை இட்டுவிட்டு,கலந்து வைத்திருக்கும் பற்பக் கலவையை ஒரு சிட்டிகை எடுத்து விபூதியை வாயில் போடுவது போல போட்டுவிட்டால்,அந்த நபருக்கு எந்த வியாதி இருந்தாலும் போய்விடும்.


இந்த சாமியாரிடம் விபூதி போட்டவுடன் எனக்கு இருந்த வியாதியெல்லாம் போய்விட்டது என்று கூறுவார்கள்.சாமியாரின் சக்தி பற்றி ஊரெல்லாம் பேசுவார்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்.


போலிச் சாமியார்களை ஒழிக்க எண்ணும் போது போலிச் சாமியார்களுக்கு ஐடியா கொடுக்கிறீர்களே என்று கேட்காதீர்கள்.இந்தப் பற்பக் கலவையின் ஒரு சிட்டிகையே இந்தளவுக்கு சக்தி உள்ளதென்றால் இதன் பெருமையை என்னவென்று சொல்வது.அதை விளக்கவே இதை உங்களுக்கு கூறினேன்.         

 அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Wednesday, January 5, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)

வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 1) ன் தொடர்ச்சியே!!! அதைப் படித்துவிட்டு பின் இந்தப் பதிவுக்கு வாருங்கள்.அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாது புரியும்.


கோயிலின் வாஸ்து வேறு வீட்டின் வாஸ்து வேறு என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அடிப்படை ஒன்றே!அவற்றை மட்டுமே சிற்ப சாஸ்திர சிந்தாமணி என்ற நூலில் விளக்கி இருப்பதை சுலபமாக்கி கொடுத்துள்ளேன். 

பழங்கால கிழக்குப் பார்த்த சிவன் கோவிலுக்குச் சென்றால்,உள்ளே நுழைந்தவுடன் இடது கைப்பக்க மூலையில் மடப் பள்ளி உள்ளது.(அதுவே சமையலறை வைக்க உகந்த இடம். அக்னி மூலை என்றழைக்கப்படும் தென் கிழக்கு மூலையே அது),அதில் கிழக்கு நோக்கி நின்று சமையல்காரர்கள் சமைக்கிறார்கள்.வீட்டிலும் அது போலவே மனையாளும் கிழக்கு நோக்கி நின்று சமைக்கட்டும். 

பிறகு பிரகாரம் சுற்றி வரும் போது கன்னி மூலையில் கணபதி(தென் மேற்கு மூலையில்) உள்ளார்.அவர் கனமானவர்,கண நாதர்,பரிகார தேவதைகளில் உயரமான கோபுரம் கொண்டவர்(கனமான மேல்நிலைத் தொட்டி,மாடிப் படிக்கட்டு தென்மேற்கு மூலையில் அமையுங்கள்,வீட்டிலேயே மிக உயரமான இடமாக இது அமையட்டும்)

அடுத்து அமைந்துள்ளது முருகன் சன்னதி அமைந்துள்ள வாயு மூலை,சிவன் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தது வாயு பகவான்தான்.சம்பந்தம் புரிகிறதா!இந்த மூலை கன்னிமூலையை(தென்மேற்கை) அடுத்த உயரமாக அமையலாம்.கன்னி மூலை தோதாக அமையவில்லையானால் இங்கே மாடிப்படிக்கட்டு அமைக்கலாம்.


அடுத்து தீர்த்தத் தொட்டி,தண்ணீர் விழுவது கிழக்கானாலும் வெளியேறுவது வடகிழக்குத் திசையில்தான் வெளியேறுகிறது.அது போல வடகிழக்குத் திசை பள்ளமாக இருந்தால்தான் வடக்கு, கிழக்குத் திசையில் இருந்து வரும் காந்த சக்தியை தேக்க முடியும்.எனவே கிணறு,ஆழ்துளைக் கிணறு, கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, ஆகியவை அமைக்கலாம்.இந்தத் திசையே ஈசானியம் என்று அழைக்கப்படும் திசை.


மூலைகளில் கழிவறை அமைக்க வேண்டாம்.அவை தேவதைகளின் இருப்பிடம்.அது போல மனையின் நடுப்பகுதி பீஜ ஸ்தானம் என்று பெயர் அந்த இடத்தையும் முக்கியத்துவம் கொடுங்கள். கழிவறைகளை வீட்டின் கிழக்கு அல்லது மேற்குப் பகுதியில் அமையுங்கள்.வீட்டின் ஈசானியத்தை எவ்வளவுக்கெவ்வளவு திறப்பாக வைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சூரிய சக்தியும்,காந்த சக்தியும் உள்ளே வரும்.அது வீட்டின் மூன்றில் ஒரு பங்கு இருந்தால் நல்லது. அல்லது மூன்றில் ஒரு பங்கில்,மூன்றில் ஒரு பங்காவது காலியாக வைக்க வேண்டும்.


வீட்டின் ஈசானியத்தில் வாசல் வைப்பது, வடக்கு, கிழக்குத் திசைகளில்,சன்னல் வைப்பது போன்றவை சூரிய சக்தியும்,காந்த சக்தியும் உள்ளே வர ஏதுவாக இருக்கும்.தென்மேற்கு மூலையான,கன்னி மூலையில்(அல்லது தெற்கு,மேற்கு திசைகளில்),பரண் அமைப்பது,கனமான பொருட்களை வைப்பது,அந்தத் திசையை மூடுவது போன்றவை சூரிய சக்தியும்,காந்த சக்தியும் வீட்டின் உள்ளேயிருந்து வெளியே போகாமல் தடுக்கும்.


பீரோ,பணம் வைப்புப் பெட்டி ஆகியவற்றை தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி வைப்பது இந்தக் காரணத்துக்காகவே.வடக்கு குபேரன் திசை எனவும் அங்கிருந்து செல்வம் வடகிழக்காக உள்ளே வந்து வெளியேறும் திசையான தென்மேற்கில் பணப்பெட்டியை வைத்து பிடித்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.


கீழ்க்கண்ட இணைப்பில் சில வாஸ்து சாஸ்திர அனுபவங்களை வலைப்பூ அன்பர் திரு ராமானந்த சுவாமிகள் கொடுத்துள்ளார்!பாருங்கள்!


http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_26.html



பதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(21)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் மூன்றில் காணுங்கள்)

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Tuesday, January 4, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 1)

வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் கூற இருக்கிறேன். 1996 ஆம் ஆண்டு நான் எனது பூர்வீக இடத்தில் வீடு கட்ட அனைத்து விதமான கடன்களும் பெற்று (P.F LOAN,HOUSE BUILDING ADVANCE,BANK LOAN,CASH ON HAND) வீட்டை ஒரு வழியாக கட்டி முடித்தேன்.
முடித்தவுடன் 1996ம் ஆண்டு மே மாதம்,எனக்கு வந்தது பணி மாறுதல் உத்தரவு அரியலூருக்கு.


இந்த சந்தர்ப்பத்தில் நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.1996ம் ஆண்டு மாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தன்று எங்கள் குருநாதரின்
குருநாதர் கோட்டைச்சாமி ஐயா அவர்களின் குருபூஜை முடித்துவிட்டு பரமக்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்.மதியம் 3 மணி இருக்கும், அப்போது ஒரு சித்த புருஷன் வந்து உன்னை அரியலூருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்,என்றார்.அப்போது என் மனம் அவ்வளவு பரிபக்குவத்தில் இல்லை.அலுவலகத்திலும் பல பிரச்சினைகள்,எனவே மனம் அமைதியாய் இல்லை.நான் அவரைப் பார்த்து எனது அலுவலக ஆட்கள் அனுப்பி வைத்த ஆளோ என்ற எண்ணத்தில் ''நீங்கள் யார் என்னை அரியலூர் அனுப்பி வைக்க என்று கேட்டேன்''.


அதற்கு அவர் கூறினார் நான் யார் என்று உன்னால் கண்டு கொள்ள முடியவில்லையா?இது போன்ற அஞ்ஞான மனநிலையில் இருந்து உன்னை பரிபக்குவ நிலைக்கு கொண்டு வரவே நாங்கள் உன்னை அரியலூர் அனுப்புகிறோம் என்றார் அவர்.


மறுபடியும் மேலும் மேலும் எனக்கு சந்தேகம் வந்த வண்ணம் இருந்தது.எனென்றால் எனக்கு உற்ற நண்பர்கள் எல்லாம் சுய நலவாதிகளாக மாறி, துரோகிகளாய் மாறிய நேரம்.அவர் மேலும் என்னிடம் 4 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது யார், யார் அரியலூரில் இருக்கும் போது என்னென்ன விடயங்களை கற்றுத் தருவார்கள் என்று சொன்னார். அது போக வீட்டைப் பற்றிய வாஸ்துவைப் பற்றியும் ஒருவர் சொல்லிக் கொடுப்பார் என்றார்.


அப்போது ஒரு விடயம் கவனித்தேன்,அவர் கிழிந்த ஒரு துண்டு மட்டுமே இடுப்பில் அணிந்து இருந்தார்.அதுவும் மிக அழுக்கான நிலையில் இருந்தது.பேசிக் கொண்டே மாலை நேரத்து சிற்றுண்டி சாலை ஒன்றிற்கு அவரை அழைத்துச் சென்றேன்.


அவரையும் என்னையும் யாரும் கவனிக்கவேயில்லை. அவர் உடையைப் பார்த்து அருவருப்புக் கொள்ளவோ, சிற்றுண்டிச் சாலையில் உட்கார்ந்து சாப்பிட எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.மாறாக மிக மரியாதையாக நடந்து கொண்டார்கள்.பல முறை நான் மிக உரத்த குரலில் பேசிய போதும் யாரும் என்னையோ அவரையோ திரும்பிப் பார்க்கவும் இல்லை.அவர் எங்கள் இருவரைச் சுற்றி ஒரு மாயத் திரையை ஏற்படுத்தி இருந்தார் என்பது புரிந்தது.பிறகே எனது மனச் சஞ்சலத்தை விட்டு அவர் சொல்வதைக் கவனித்தேன்.


அவர் கூறியபடியே எல்லாம் நடந்தது.அரியலூர் சென்றேன்.அவர் கூறிய பேர்களில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வந்து என்னிடம் ஒவ்வொரு விடயத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.இப்படியும் நடக்குமா என்று இன்றும் அதிசயித்துக் கொண்டு இருக்கிறேன்.ஆனால் ஒன்று தெளிவாக புரிந்தது. ''என் செயலாவது யாதொன்றும் இல்லை''.  


இனி வாஸ்துவுக்கு வருவோம்.கிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து. என்ன இவ்வளவு எளிதாக முடித்துவிட்டீர்கள் என்று கேட்கிறீர்களா?விளக்குகிறேன்.


இந்தப் பதிவை ஏன் எழுதுகிறேன் என்றால் நிறைய பேர் கடன்,நிறைய வாங்கி வீட்டைக் கட்டியவுடன் பெருங் கஷ்டத்திற்கு உள்ளாவர்.அது அளவுக்கு அதிகமான கடனினாலும் இருக்கலாம்.திட்டமிடாத செய்கையாலும் இருக்கலாம்.ஆனால் வாஸ்துவினால் இருக்கலாமோ என்று சந்தேகித்து மீண்டும் செலவு செய்து வீட்டை மாறுதல் செய்து, கட்டிட செலவுகளால் சிரமப்படுகிறார்கள்.நானும் அதே சூழ்நிலையைச் சந்தித்து மிகவும் கஷ்டப்பட்டவனே!அது போன்ற நிலையை நமது வலைப்பூ வாசகர்களுக்கு ஏற்படாமல் காக்கவும்,வந்திருந்தால் போக்கவுமே இந்தப் பதிவு.


பதிவு மிகப் பெரியதாகப் போவதால் இதை இரண்டாக வெளியிடுகிறேன்.பதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் இரண்டில் காணுங்கள்)



அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

Sunday, January 2, 2011

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம்8

அக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை  அக்கு பஞ்சரைப் (PRACTICAL ACUPUNCTURE) பார்ப்பதில் உள்ளது. அவற்றையே இங்கு நான் விளக்கி வருகிறேன்.


அக்கு பஞ்சர் என்றால் ஊசியைக் குத்தி வைத்தியம் பார்ப்பது மட்டுமல்ல.வியாதியின் அடிப்படையை களையும், அவற்றைக் களையும் பழக்க வழக்கங்கள், உணவுகள் இவற்றையும் நம் சித்தர்களின் சித்த வைத்தியம் போலவே கூறுகிறது.(போகர்தான் இந்தியாவிலிருந்து சீனாவிற்குப் போய் இது போன்ற விடயங்களை அங்கே கற்றுக் கொடுத்தார் என்று கூறுகிறது சரித்திரம் எனவே இதுவும் சித்தர் விஞ்ஞானமே.)


அந்தக் காரணங்களை சித்த வைத்தியத்திலும், பழந்தமிழர் வாழ்வியலிலும் சரியாக விளக்கிக் கூறாறததால் பலவற்றை நானே மூட நம்பிக்கை என்று ஒரு காலத்தில் நினைத்திருக்கிறேன்.


பிறகு காரணங்கள் விளங்க விளங்க, பின் எந்த பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.


நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.இதை வாத நோய்கள் என்பார்கள்.


பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.


அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக 
அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.


பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.


அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.


சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.


இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.


விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.


மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.


இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



இப்போதுதான் பதிவிடப்பட்டுள்ள சித்தர் விஞ்ஞானம் பாகம் 4 ன் இணைப்பு இதோ.அது வெகு காலமாக கோழி முட்டையை அடைகாப்பது போல் காத்து இன்று வெளி வந்திருக்கிறது.அது பழந்தமிழரின் கால அளவைகள்.பார்த்து இன்புறுங்கள்.தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.எனென்றால் இது நான் மிகவும் யோசித்து இட்ட பதிவு.


http://machamuni.blogspot.com/2010/12/3.html


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  


Post Comment