மொழி பெயர்ப்புக் கருவி

Showing posts with label சுயநலமில்லாத பொது நல சமுதாயம். Show all posts
Showing posts with label சுயநலமில்லாத பொது நல சமுதாயம். Show all posts

Sunday, February 6, 2011

சுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்புகிறார்கள்

சுனிதா கிருஷ்ணன் என்ற இந்தப் பெண்மணியின் போராட்டம்,காயமுற்ற போதும்,அடிபட்டபோதும் வீறு கொண்டு எழும் தன்மை என்னை வியக்க வைக்கிறது.இந்தப் பெண்மணியைப் பாராட்ட ஒரு பதிவு கட்டாயம் போட்டே ஆக வேண்டும் என்றுதான் இந்தப் பதிவு.


பதினான்கு பேரால் கற்பழிக்கப்பட்டு அதன் பின் இரண்டு வருடங்கள் ,உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பின் சமுதாய ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு வெகுவாக பாதிக்கப்பட்டும், மீண்டும் வீறு கொண்டு எழுந்து வந்து தன்னைப் போல பாதிப்படைந்தவர்களை மீட்டு தன்னலம் கருதாது சேவை புரியும் இவர் வாழும் தெய்வம்.


இந்த முயற்சியில் வலது காது கேட்காத நிலையை அடைந்தது.இவரின் செயலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.


இவரால் காப்பாற்றப்பட்ட குழந்தைகளில் ப்ரனிதா என்ற பெண் குழந்தை ஒரு விலை மாதாக்கப்பட்டவரின் குழந்தை,அந்த விலை மாதுக்கு ஹெச் ஐ வி.இவரின் வயதின் காரணமாக விலை போகாத விலை மாதாகையால்,ஆள்பிடித்து வர இந்தக் குழந்தையை ஏவ,ஆள் பிடிக்கப் போன அந்தக் குழந்தை,தானே கொடுமைக்கு ஆளாகி மூன்று பேரால் கெடுக்கப்பட்டு மிக மோசமான நிலையில் மீட்கப்பட்டது.


ஷாகீன் என்ற குழந்தையை ஒரு இருப்புப் பாதையில் கண்டெடுத்தபோது அந்தக் குழந்தையின் குடல்கள் வெளியே கிடந்தது.அந்தக் குழந்தை பலரால் உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்தது.20 க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு அக்குழந்தைக்கு உயிரூட்டப்பட்டது.


அஞ்சலியின் தந்தை குடிக்கு அடிமையான பெருங்குடிகாரன்.தன் மகளை நிர்வாணப் படங்கள் எடுப்பதற்காக விற்றுவிட்டான்.இப்படி 3,4,5 வயது பெண் குழந்தைகள் சாதாரண காரணங்களுக்காக,விற்கப்படுகின்றன,கொடுமைப் படுத்தப்படுகிறார்கள்,எனில் வயது வந்த பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்!!!!!!!!!!!!


இதைக் கண்டவுடன் என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் வர்மப் பிரயோகம் பற்றிக் கற்றுக் கொடுத்து, அவசியம் ஏற்படும் போது உபயோகப் படுத்திக் கொள்ள அனுமதியும் கொடுத்துவிட்டேன். 


   எனது வலைப்பூவில் இந்த வார்த்தைகளை ஏற்கெனவே பொறித்து வைத்துள்ளேன்.ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.” இந்த வார்த்தைகளின்படியே சுனிதா கிருஷ்ணன் இப்படி அநீதிகளைக் கண்ட போது பொங்கி எழுந்தார்,எழுந்து கொண்டிருக்கிறார்,இன்னும் எழுவார்.அதனால் இவர் என் தோழி. 
  
நீங்களும் என் தோழர் ஆக வேண்டும் என்றால் அநீதிகளைக் கண்டு பொங்கி எழுங்கள்.அநீதிகளைத் தட்டிக் கேளுங்கள்.அதனால் உங்களுக்கு சிறு,சிறு பாதிப்புகள் நேரிட்டாலும், ஏன் உயிரையே இழக்க நேரிட்டாலும் மனம் கலங்காதீர்கள்.


ஒரு உயிர் ஒரு முறைதான் போகப் போகிறது.அதை நினைத்து தினம் தினம் செத்து செத்துப் பிழைக்காதீர்கள். தைரியமாக தீமைகளை எதிர்த்துப் போராடுங்கள்.உங்கள் சந்ததியினருக்கு இது போல இருக்கக் கற்றுக் கொடுங்கள்.


நமது நாட்டின் லஞ்சப் பணம் மேலை நாட்டு வங்கிகளில் முடங்கி கிடப்பதைப் பாருங்கள்.லஞ்சம் கொடுக்காதீர்கள்.லஞ்சம் கேட்கும் அவனே நீங்கள் கொடுக்காமல் போராடினால், பின் லஞ்சம் வேண்டாம் இந்தா என்று அந்த வேலையைச் செய்து தருவான்.நமது பணம் எவ்வளவு அயல் நாட்டில் கிடக்கிறது என்று பாருங்கள்.
இது இந்தியாவில் இருந்தால் பணப்புழக்கம் எவ்வளவு அதிகரிக்கும்.எத்தனை திட்டங்களுக்கு பயன் படும்.இது பத்து வருட மொத்த இந்தியாவின் பட்ஜெட் தொகை.கொஞ்சமாவது யோசிங்க!!!!







நன்றி புதிய தலைமுறை


நான் இதே போல கடந்து வந்த பாதைகள் கரடு, முரடானவை,முள்காடுகள் நிறைந்தது.பல முறை என்னைக் கொல்ல அடியாட்கள் ஏவப்பட்டுள்ளார்கள்.
போராடியே இறைவன் அருளால் வெற்றி பெற்றுள்ளேன். இறைவன் அருள் இல்லாவிட்டால் என்னைத் தற்காத்துக் கொள்ள இத்தனை விடயங்கள்தான் எனக்குத் தெரிய வந்திருக்குமா!!!
 

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்



Post Comment

Saturday, August 7, 2010

சுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்புகிறார்கள்

தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு,வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்போன் ;சிறியதொரு கடுகு போல் உள்ளம் கொண்டார்; தெருவார்க்கும் உதவாத சிறிய உள்ளம்,
தன்னலடா என் சிற்றூர் என்போனுள்ளம் கடுகுக்கு நேர் மூத்த துவரையுள்ளம்;தென்னையுள்ளம் ஒன்றுண்டு,அது தன்னாட்டு சுதந்தரத்தால் பிறர் நாட்டு உரிமை கோடல்;
தூய உள்ளம்,பெரிய உள்ளம் அன்பு உள்ளம்,தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் அங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே!



"உவப்பின் நடுவிலே,








ஓர்















கசப்பான சேதியுண்டு கேட்பீர்" என்றாள்!
பொதுத்தொண்டு செய்தோமா






?

"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த
மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?
அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.
வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு




?





















இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?







ஏகாலி வந்தானா? வேலைக் காரி




















சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?




















செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை






ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.
தன்னலத்தால் என்ன நடக்கும்
"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
எப்போது தமிழினுக்குக் கையாலான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்தி 
























நினைத் தோமா? இல்லை;
















அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"

நன்றி பாரதி தாசன்




மேன்மை மிகு இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் கதாபாத்திரங்களில் , கதாபாத்திரங்கள் அனைத்தும்,உயர்ந்த அறிவும்,பொது நல நோக்கு பேசும், பாரதி தாசன் கவிதைகளையும், கீட்ஸ்ன் கவிதைகள் மட்டுமல்ல ஒரு உயர்ந்த மன நிலையில் சமுதாயம் பற்றிய வேறு கண்ணோட்டத்தில் பேசும்.அது இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் குரலே!  
மேன்மை மிகு இயக்குனர் பாலச்சந்தர் அவ்ர்களுக்கும் இந்த வீடியோ வெளியீட்டு உரிமையாளருக்கும் நன்றி.


சித்தர்கள் பலமருத்துவ, வான சாத்திரம்,கர்ம காண்டம்,ஜோதிட நூல், சரநூல் சாத்திரம்,நாடி சாஸ்திரம் இப்படி ஆயிரக் கணக்கான நூல்களை படைத்து இன்று வரை வழி காட்டியும் வருகின்றனர்.இது போல நாமும் கொஞ்சம் சுயநலமின்றி பொது நல நோக்கில் செயல்பட்டால் 
நன்று. 
கீழே கண்டுள்ள கட்டுரையும் மனதால் உறங்கும் மக்களைத் தட்டி எழுப்பும் முயற்ச்சியில்,இதே நோக்கிலும்,பார்வையிலும் எழுதப்பட்டுள்ளது.  


நன்றி ;-புதிய தலைமுறை
நம் சுயநலம் கண்டே சித்தர்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.எனவே மேலே உள்ள விஷயங்களை படித்த பின் நம் எண்ணம் சற்றே மாறினால் சித்தர்கள்மிகவும் மகிழ்வார்கள். அவர்கள் ஆசி நமக்குண்டு.
 எனது சீடரான தமிழவேள்(அக்கு புஞ்சர்,சித்தா,மற்றும் இறை வழி மருத்துவம்)அவர்களின் வலைப் பூ முகவரி இது.விரும்புபவர்கள் பார்வையிடலாம். 
http://siddhahealer.blogspot.com/

Post Comment