மொழி பெயர்ப்புக் கருவி

Showing posts with label சித்தர்களின் விஞ்ஞானம். Show all posts
Showing posts with label சித்தர்களின் விஞ்ஞானம். Show all posts

Sunday, January 29, 2012

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55)சதுரகிரி மாவூத்து 2

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 54)சதுரகிரி மாவூற்று 1என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படி படித்தால் மட்டுமே தொடர்பு விட்டுப் போகாது புரியும்.


இந்த  மாவூற்று என்ற தீர்த்தத்தில் நீராடி,அந்தத் தீர்த்தத்தை குடித்து வந்தால் தீராத நோயெல்லாம் தீரும் என்பது சித்தர் வாக்கு.இது பல்லாயிரம் வருடங்களாய் இறை அருளால் வற்றாமல் பொங்கிப் பெருகி வந்து கொண்டிருக்கிறது.அந்த ஊற்றைப் பற்றிய படங்கள் இதோ கீழே.


 மாவூற்று
மாவூற்றில் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்
மாவூற்றுப்பாதை

 மாவூற்றுப் படங்கள்





சதுரகிரித் தல புராணத்தில் முதல் பாடலில் குறிப்பிட்டுள்ள சடாதாரி அம்மன் சன்னதி இதோ கீழே!!!!!.(முற்பிறவியில் தேவமாதாக இருந்து யாழ் வல்ல தேவரை(மறு பிறப்பில் பச்சைமால்) காமுற்றதால் மானிடப் பிறவி எடுத்தவர்) 
சடாதாரி அம்மன்

மாவூற்றில் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்  ஷண்முக சுவாமிகளிடம் ஆசிபெறும் காட்சி

சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவரது மலைவாழ் நண்பர்களுடன்(பளியர்கள்)

ஷண்முக சுவாமிகள்
மேற்கண்ட ஷண்முக சாமிகள் யோகா போன்றவற்றால் உடலை உறுதி செய்தவர்.பல திவ்விய தேசங்களில் சுற்றியவர்.மேலும் பல அரிய மூலிகைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
மாவூற்றில் உதயகிரிநாதர் கோவிலில் நான் ஷண்முக சுவாமிகளிடம் ஆசிபெறும் காட்சி

உதயகிரிநாதர்

மேற்கண்ட கடைசிப் படத்தில் சூலாயுதத்தில் குமிழுக்குக் கீழ் ஒரு ஒளி வட்டம் தெரிகிறதா.அது சித்தர்களின் ஒளியுடல் தரிசனம்.பல்லாண்டுகளாக சித்தர்கள் இங்கு வந்து உதய கிரி நாதரை அல்லும் பகலும் தரிசித்துச் செல்கின்றனர்.அந்தச் சித்தர்களின் அருள் பெற்று எல்லோரும் நீடூழி வாழ்க!!!

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 54)சதுரகிரி மாவூற்று 1


சித்தர்கள் பற்றி பல விடயங்களை விளக்கி உள்ளேன் என்றாலும் அவர்களின் திறன்களோ, கொள்கைகளோ, செயல்பாடுகளோ வரைமுறையில் அடக்க முடியாது. எதற்காக இதை செய்கிறார்கள் என்று நம் சாதாரண அறிவைக் கொண்டு யோசிக்கவோ அளவிடவோ முடியாது. ஆனால் இயற்கையும் அவர்கள் நில் என்று சொன்னால் நிற்கும்.எனவேதான் அவர்களால் இயற்கை அற்புதங்களை சமைக்க (உண்டாக்க) முடிந்தது.


இப்போதும் இவர்கள் இவர்கள் இறைவன் அருளால் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.அப்படி இறைவன் இவர்களோடு திருவிளையாடல் புரிந்த ஒரு தலத்தைப் பற்றிய பதிப்பே இது.இதில் முதலில் இந்த இடத்தைப் பற்றி சதுரகிரித் தல புராணத்தில் குறிப்பிட்டுள்ள பக்கங்கள் சிலவற்றைத் தருகிறேன்.அதில் நான் வைத்திருப்பது மிகப் பழைய புத்தகம் என்பதால்,அதில் 55&56 ம் பக்கங்கள் விடுபட்டுள்ளன.இருந்தாலும் முக்கிய விடயங்கள் விட்டுப் போகவில்லை.


இந்த இடத்திற்கு வத்திராயிருப்பிற்கு வந்து,அங்கிருந்து மஹாராஜபுரம் வழியாக தம்பிபட்டி செல்லும் பாதையில் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி,ஏதேனும் ஆட்டோவிலோ,நடந்தோ இரண்டு கிலோ மீட்டர் வரை சென்றால் மாவூற்று என்ற இத்தலத்தை தரிசிக்கலாம்.










இப்படி இறைவன் சித்தர்களோடு சித்தர்களாய் கலந்திருந்த இடம் இது.இந்த இடத்துக்குத்தான் முதலில் சதுரகிரி செல்பவர்கள் செல்ல வேண்டும்.இந்த  மாவூற்று என்ற தீர்த்தத்தில் குளித்துவிட்டு உதயகிரி நாதனை தரிசித்துவிட்டுத்தான் சுந்தர மஹாலிங்கத்தையும் , சந்தன மஹாலிங்கத்தையும் தரிசிக்க செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.பதிவு பெரிதாகப் போனதால் இதையே இரட்டைப் பதிவாக இன்றே படங்களுடன் வெளியிடுகிறேன்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment